Followers

Monday, December 5, 2016

பித்ருதோஷம்


வணக்கம்!
          நேற்று ஒரு பதிவை எழுதினேன். அது நான் கணித்து எழுதியதில்லை சும்மா எழுதினேன் ஆனால் அது தமிழ்நாட்டிற்க்கு எந்தளவுக்கு முக்கியமான பதிவு என்பது உங்களுக்கு நேற்று இரவில் இருந்து தெரிந்து இருக்கும்.

ராகு கேது மூன்றாவது வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை இனி பார்க்கலாம்.

ஒருவன் வாழ்வில் அதிகமாக கஷ்டப்படுகிறான் என்றால் அதற்கு காரணம் இருக்கின்றது அவர்களின் ஜாதகத்தில் ராகு கேது மூன்றில் அமர்ந்திருக்கவேண்டும் . வார்த்தையில் விவரிக்கமுடியாத வார்த்தையில் கஷ்டத்தை அனுபவிப்பவர்களுக்கு இந்த தோஷம் கண்டிப்பாக இருக்கின்றது என்று அர்த்தம்.

ராகு கேது மூன்றில் அமரும்பொழுது அது பித்ருதோஷம் என்று அழைக்கப்படுகிறது. பித்ருதோஷம் இருக்கும் நபர்கள் வாழ்வில் சொல்லமுடியாத அலைச்சலோடு ஒரு கஷ்டத்தை அனுபவித்திருப்பார்கள்.

ஒருவன் ஞானியாகிறான் என்றால் அது அவ்வளவு எளிதான ஒரு காரியம் கிடையாது. பல கஷ்டத்தை அனுபவித்திருப்பான் அவன் தான் ஞானி என்பார்கள். உண்மையில் பித்ருதோஷம் இருப்பவர்கள் ஞானியாக இருப்பார்கள் என்பது எனது கருத்து

தொடர்ந்து பார்க்கலாம் ...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

சார் வணக்கம் ராகு,கேது 1,5,9,3 இல் இருந்தாலே பித்ரு தோஷம் தானா?இல்லை ராகு,கேது
அமர்ந்த ஸ்தான அதிபதி மறைவிடங்களில் அமராமல் நல்ல நிலையில் இருந்தால் தோஷம் அடிபடுமா?இல்லை சூரியன் உச்சமாக இருந்தாலும் தோஷம் அடிபடுமா? தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி.....

rajeshsubbu said...

வணக்கம்
தங்களின் வருகைக்கும் கேள்விக்கும் நன்றி. தனிபதிவாக தருகிறேன்.
நன்றி