Followers

Wednesday, December 7, 2016

அம்மன் அருள்


ணக்கம்!
         தற்பொழுது கார்த்திகை மாதம் மற்றும் அடுத்து மார்கழி மாதம் இரண்டு மாதத்திலும் நிறைய கனவுகள் வரக்கூடிய ஒரு மாதமாகவே இருக்கும். இந்த மாதத்தில் வரக்கூடிய கனவில் நீங்கள் செய்த பாவம் எல்லாம் மறுமுறை உங்களின் கனவில் அதனைப்பற்றி காட்டும்.

ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் நீங்கள் ஏமாற்றி பல வருடங்கள் சென்றுவிட்டாலும் அந்த பெண்ணைப்பற்றி காட்டி அதற்கு ஒரு தீர்வும் அந்த கனவில் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

மேற்ச்சொன்ன உதாரணம் போல் பல பாவங்கள் கனவில் வரும். அதுபோல் இந்த ஜென்மங்கள் இல்லாமல் போனஜென்மத்திலும் செய்த பாவங்கள் எல்லாம் இந்த கனவில் வரும். அதற்கு தீர்வும் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

இது அம்மனின் அருளால் உங்களுக்கு நடக்கும். கண்டிப்பாக உங்களுக்கு நடந்தால் அது அம்மன் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையால் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவரை அனைவருக்கும் நடக்கவேண்டும் என்று இதனை மிகுந்த சிரம் எடுத்து செய்து இருக்கிறேன். நீங்கள் நன்றாக பயன்பெறலாம்.

ஜாதககதம்பம் படிப்பதால் இந்த விசயத்தை உங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து இருக்கிறேன். கண்டிப்பாக நடக்கும் எதிர்பார்த்து இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு