Followers

Friday, January 4, 2013

பூர்வ புண்ணியம் 14



ணக்கம் ண்பர்களே! 

பூர்வபுண்ணிய தொடரில் இப்பதிவில் ஒரு கருத்தை பார்க்கலாம். 

பூர்வபுண்ணிய இடத்தை வைத்து தான் ஒருவருக்கு திடீர் பணவரவுகளை சொல்லுவார்கள். ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பணம் விழும். அப்பொழுது மக்கள் சொல்லுவார்கள் அவனுக்கு என்ன டா கொடுத்து வைத்தவன் லக் இருக்கிறது பணம் வருகிறது என்று சொல்வார்கள். இப்பொழுது எல்லாம் லாட்டரி சீட்டு தடை செய்துவிட்டார்கள் லாட்டரியில் பணம் வராது.தமிழ்நாட்டில் மட்டு்ம் தான் தடை. பிறமாநிலங்களில் இது இருக்கிறது அங்கு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது தான். 

ஷேர்மார்க்கெட்டில் பணம் வரும். இன்று  பார்த்தீர்கள் என்றால் கமாடிட்டி மார்க்கெட் நல்ல சரிவை கொடுத்து இருக்கிறது இந்த மாதிரி நேரத்தில் பணத்தை அள்ளிவிடுவார்கள். இது போல் தான் திடீர் பணவரவு எல்லாம் பூர்வபுண்ணியத்தை வைத்து சொல்லுவார்கள்.

உலகத்தில் இருக்கின்ற அனைத்து கேம்லிங்கில் இருந்தும் பணவரவு பெறுவதற்க்கு இந்த பூர்வபுண்ணியாதிபதியால் தான் நடைபெறுகிறது. சில பேர் சீட்டு ஆடுவார்கள் ஒரு சிறிய தொகை கிடைக்கும். இவர்களுக்கு பார்த்தால் ஐந்தாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டில் இருப்பார் அல்லது இரண்டாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டில் இருப்பார்கள்.

சில பேர் ரேஸ்கிளப் போவார்கள் அவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஒரு சில நேரங்களில் எடுத்துவிடுவார்கள் அவர்களுக்கு ஐந்தாம் வீட்டு அதிபர் பதினோராம் வீட்டில் இருக்கும் அல்லது பதினோராம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டில் இருப்பார்.

இது எப்பொழுது நடைபெறும் என்றால் இவர்கள் சம்பந்தப்பட்டு தசா நடைபெறும்பொழுது உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாக ஐந்தாம் வீட்டு தசாவில் பணவரவு அதிகமாக இருக்கும். அதற்க்கு பூர்வபுண்ணியாதிபதி நன்றாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் பணவரவு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...
This comment has been removed by the author.