Followers

Thursday, January 10, 2013

ஆன்மீக அனுபவங்கள் 50




வணக்கம் நண்பர்களே !

நேற்று ஒரு நண்பர் அதர்வண வேதத்தைப்பற்றி கேட்டார் அவரின் வழியாக உங்களுக்கும் இதனைப்பற்றி தெரிந்ததை சொல்லலாம் என்று இந்த பதிவை தருகிறேன்

ரிக் யஜீர் சாம வேதங்கள் கடவுளை வழிபடும் முறை கடவுளை பற்றி போற்றி   பாடுவது போன்றவை இருக்கின்றன. அதர்வண வேதத்தில் மனிதன் ஒருவனை ஆபத்து, தீமை, எதிரிகளிடம்  ,நோய் நோடிகள் போன்றவற்றில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ளும் வழி முறைகளும் இதில் உள்ளன. 

ஒரு மனிதன் அவன் முன்ஜென்மத்தின் காரணமாக ஏழையாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனை ஏதோ ஒரு காரணத்திற்க்கு வசதி உள்ளவன் அவனுக்கு தீங்கு செய்தான் என்றால் அவனால் அந்த வசதிஉள்ளவனை எதிர்க்க முடியாது. 

அப்பொழுது அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள வழி தேடும் போது இந்த அதர்வண வேதம் தான் அவனுக்கு உதவும். அதர்வண வேதம் பிற வேதங்களை காட்டிலும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்றால் பிற வேதங்களில் கடவுளை வழிபடும் முறைகள் மட்டும் இருக்கும் அதர்வண வேதத்தில் அந்த கடவுளை வைத்து எப்படி வேலை வாங்குவது என்று இருக்கும். 

அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்கள் அனைத்தும் சக்தியுடையவை. இந்திய மாந்தீரீகம் பற்றி நீங்கள் தெரியவேண்டும் என்றால் அதர்வண வேதத்தை நீங்கள் படித்திருக்க வேண்டும். 

அதர்வண வேதம் இன்று அதிகபட்சமாக அழிந்துவிட்டதே என்றும் சொல்லலாம். ஒரு சிலர் இதனை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அதர்வண வேதத்தைப்பற்றி கருத்துகளை நீங்கள் தாருங்கள் அடுத்த பதிவில் விவரமாக எனக்கு தெரிந்ததை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: