Followers

Thursday, January 24, 2013

ஆன்மீக அனுபவங்கள் 58



வணக்கம் நண்பர்களே!

 ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் நல்ல தகவலை பார்க்கலாம். 

நேற்று பார்த்த பதிவில் பரவசநிலையை பற்றி பார்த்தோம் இப்பதிவில் அதனை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

நீங்கள் சந்தித்த நபர் உங்களுக்குள் பரவச நிலையை ஏற்படுத்தினால் அவர் தான் உங்களுக்கு வழிகாட்டி. அவரை நீங்கள் சந்திக்கும்போது அவரின் கண்களை நன்றாக கவனியுங்கள். அந்த கண்கள் தான் உங்களை கரைசேர்க்கமுடியும். அவரின் கண்களில் இருந்து சக்தி வெளிவரும். மிகப்பெரிய மகான்களின் கண்களை உற்று நோக்கும் போது உங்களுக்குள் இருக்கும் ஆத்மாவிற்க்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும்.

ஒரு சாதாரண மனிதனின் கண்களை எவ்வளவு நேரம் உற்று நோக்கினாலும் ஒன்றும் தெரியாது அதே நேரத்தில் மிகுந்த சக்தியுடையவர்களின் கண்களை உற்று நோக்கும்போது அவர்களின் உங்களால் தொடர்ந்து உற்றுநோக்க முடியாது. அவர்களின் கண்கள் காந்தம்போல் உங்களின் ஆத்மாவை இழுக்கும்.

அடுத்ததாக அவர்களிடம் பேசும்போது அவர்களின் சக்தி உங்களின் ஆத்மாவை இழுக்கும். அவர் சும்மா பேசினால் கூட உங்களின் ஆத்மா அவரை தேட ஆரம்பிக்கும். நீங்கள் அவ்வாறு பேசும்போது உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஆரம்பிக்கும்.

ஒரு சிலர் எழுதும் எழுத்துக்கள் கூட உங்களின் ஆத்மாவை தூண்டும். அதனை படித்துக்கூட உங்களின் ஆத்மா பரவசநிலையை அடையமுடியும்.

ஒரு சில மகான்கள் இருக்கிறார்கள் அவர்களின் கால்களை பார்க்கும்போது நமக்குள் பரவசநிலையை அடையலாம். மகான்களின் திருவடி என்று சொல்லுவார்கள். வழிபாட்டு தலங்களில் கூட மகான்களின் திருவடியை வைத்திருப்பார்கள். அதன் மூலம் நாம் பரவசநிலையை அடையமுடியும் என்ன நண்பர்களே இதனை எல்லாம் கவனித்து நீங்கள் பரவசநிலையை அடைவீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

Saravanakumar.B said...

thanks for sharing...
ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது
கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்
http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

KJ said...

Sir, pl continue on fifth place owner dasa for other rasi's also.