Followers

Saturday, January 19, 2013

ஆன்மீக அனுபவங்கள் 55



ணக்கம் ண்பர்களே !

ஆன்மீக அனுபவங்களில் வரும் செய்தியை உள்வாங்கிக்கொண்டு அதனை உங்களின் மனதில் போட்டு சிந்தனை மட்டும் செய்து பாருங்கள் தேவையற்ற பயிற்சியை தகுந்த குரு இல்லாமல் செய்து பார்க்காதீர்கள். ஏன் என்றால் நான் எழுதுவது எனது அனுபவத்தில் அதனை செய்து பார்த்து அதனை உங்களுக்கு சொல்லிவருகிறேன். 

நான் உங்களுக்கு சொல்லும்போது அதில் உள்ள கருத்துக்களில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே உங்களுக்கு தருகிறேன். அதனை எப்படி செய்வது என்பதை நான் உங்களுக்கு சொல்லவில்லை ஏன் என்றால் அது அனைத்தும் குரு மூலம் கற்கவேண்டிய ஒரு செயல்.

நான் சொல்லிவிட்டேன் என்று நீங்கள் அந்த பயிற்சியை எடுத்தால் நீங்கள் சந்திப்பது மரணமாககூட இருக்கலாம். பிராயாணமத்தை மட்டும் செய்து பார்க்கலாம். நான் சிவனை சந்திக்க சுடுகாட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லுவேன் நீங்கள் அந்த கருத்தினை உள்வாங்கிக் கொண்டு நீங்களே சுடுகாட்டிற்க்கு சென்று ஏதாவது பயிற்சி செய்தால் தேவையற்ற பிரச்சினைகளில் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை நினைவில் முதலில் வையுங்கள்.

ஒரு சாதாரண ஆள் சுடுகாட்டில் போய் சுற்றிவிட்டு வரலாம் ஆனால் அங்கு போய் நீங்கள் மந்திரங்களை உபயோகம் செய்தால் அவ்வளவு தான் உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடும் அவ்வளவு சக்தி உள்ள இடம் என்பதை முதலில் உங்கள் மனதில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

ஒரு சில மந்திரங்கள் இந்த இந்த இடத்தில் தான் உரு ஏறும் என்பதை விதி வகுத்து வைத்துள்ளார்கள். சுடுகாட்டில் சிவனுக்கு என்று தனி மந்திரம் உள்ளது. அந்த மந்திரங்களை அங்கு தான் நீங்கள் பயன்படுத்த முடியும்.

தேவையற்ற மந்திரங்களை மற்றும் புத்தகங்களில் உள்ள மந்திரங்களை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் மந்திரபயிற்சினை செய்கிறேன் என்றால் அது அபத்தமாக முடியும் .

மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்லுவது என்ன என்றால் தேவையற்ற பயிற்சியில் ஈடுபடவேண்டாம் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்க்காகவே இந்த பதிவை தருகிறேன்.

என்ன செய்வீர்களா நண்பர்களே


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: