Followers

Tuesday, January 29, 2013

மேஷம் : ஐந்தில் சனி



ணக்கம்ண்பர்களே !

                 பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக நீங்கள் முன்ஜென்மத்தில் என்ன தவறு செய்திருப்பீர்கள் என்று பார்த்து வருகிறோம்.

மேஷ லக்கனத்திற்க்கு சனி பகவான் ஐந்தில் நின்றால் என்ன பாவம் செய்திருப்பீர்கள் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷ லக்கினத்திற்க்கு ஐந்தாம் வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். சிம்மத்தில் அமரும் சனி பகவான் பகையாகிறார். மேஷம் செவ்வாயின் வீடு. சனிக்கு செவ்வாய்யும் சரிவராது சூரியனும் சரிவராது. இருவரையும் பகையாகதான் பார்ப்பார். கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பாவம் செய்தால் மட்டுமே இந்த அமைப்பு வரும். மேஷத்திற்க்கு தொழில் மற்றும் லாபஸ்தான அதிபதியாக சனிபகவான் வருகிறார்.

யாரை கெடுத்து இருப்பார்?

கர்ம வீடு என்பது பத்தாவது வீடு தான், தொழில் புரியும் இடத்தில் தவறு செய்திருப்பார்  மூத்த சகோதர சகோதரிகளை மற்றும் நண்பர்களுக்கு பாவம் செய்திருப்பார். தான் செய்ய வேண்டிய கடமை என்னும் கரமாவை ஒழுங்காக செய்யாததால் இது நடந்திருக்கும். 

எப்படி கெடுத்து இருப்பார்?

அரசாங்கத்தில் இவரைப்பற்றி இல்லாததை சொல்லி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். சம்பந்தமே இல்லாமல் தண்டனை அவர்களின் உடலுக்கு இவர் வாங்கி தந்ததால் இந்த பாவம் ஏற்பட்டு இருக்கும். கண்டிப்பாக மேஷம் காவல்துறை மற்றும் ராணுவத்தை காட்டும் கிரகஅதிபதியின் வீடு என்பதால் ஜெயில் தண்டனை பெற்று தூக்கு போடபட்டு இருக்கலாம்.

பரிகாரம் என்ன?

சம்பந்தப்பட்ட நபரை முதலில் சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்வது நல்லது. அரசாங்கத்தின் வழியாக உதவி வழங்கினால் மேலும் சிறப்பு. 

மூத்த சகோதர சகோதரர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு விசுவாசமாக நடந்துக்கொள்ளுங்கள் தேவையற்ற கோபத்தை குறைத்துக்கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.


நண்பர்களே நான் இந்த பூர்வபுண்ணியத்தை எழுதுவது என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து இதுவரை நான் பார்த்த ஜாதகங்களை கொண்டு அவர்களின் நடவடிக்கையை உற்று நோக்கி இதனை உங்களுக்கு தருகிறேன். பூர்வபுண்ணியத்தில் இது ஒரு சதவீதம் தான் கொடுத்து இருக்கிறேன். மீதி தொன்னுற்றி ஒன்பது சதவீதம் சொல்லவேண்டும். இப்பொழுது இது போதும். இதனை வைத்து பார்த்தாலே நம்மால் பாதிக்கப்பட்ட நபர் யார் என்று தெரிந்துவிடும். 

மீண்டும் மீண்டும் சொல்லுவது பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு உதவி செய்வது மூலமாக தான் உங்களின் பூர்வீக கர்மாவை தொலைக்கமுடியும் என்பதை நீங்கள் முதலில் மனதில் வைத்து செயல்படுங்கள்.

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழ்க்கை சிறிது காலம் தான் இருக்கிறது. அந்த வாழ்க்கையில் நான் பணக்காரன் நான் பெரியவன் நான் அப்படி இருப்பவன் இப்படி இருப்பவன் என்று கர்வம் கொள்ளாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கர்மாவை குறைத்து ஆனந்தமாக வாழ எப்படி இன்று முதல் வாழலாம் என்பதை முதலில் செயல்படுத்துங்கள்.

இறைவன் உங்களின் முன் ஒரு அடி எடுத்துவைப்பான். பூர்வபுண்ணியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் ஒரு அடி கூட எடுத்துவைப்பதில்லை என்பதை நான் பலபேர்களிடம் பார்த்து இருக்கிறேன். அந்த இறைவன் ஒரு அடி எடுத்து வைக்க என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லியுள்ளேன். இறைவனை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: