Followers

Saturday, January 5, 2013

ஆன்மீக அனுபவங்கள் 48



வணக்கம் நண்பர்களே !
                     மந்திரஅனுபவங்களை பெறுவதற்க்கு அனுப்பிய ஜாதகங்களை பார்த்துவிட்டேன். இதுவரை யாரிடம் கொடுப்பது என்று முடிவுஎடுக்கவில்லை.

உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் சொல்லிக்கொள்ளுவது என்ன என்றால் இது மாதிரி யாராவது ஒரு சக்தியை எடுத்து கொடுப்பார்களா என்று நீங்களே வெளியில் விசாரித்து பார்த்துக்கொள்ளுங்கள்.எனக்கு தெரிந்து யாரிடமும் இதனை வாங்கமுடியாது கொடுக்கமாட்டார்கள். 

நான் ஏன் தருகிறேன் என்றால் இதனை எனக்கு கொடுத்தவர் எந்தவித அறிமுகமும் இல்லாதவர் என்னிடம் கொடுத்தார். அந்த நல்ல எண்ணங்களால் இதனை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று முடிவு எடுத்து நமது தளத்தை பார்வையிடும் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். 

இந்த மாதிரி சக்தியை எடுப்பவர்கள் இந்தியாவில் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிகபட்சமாக ஆயிரத்தை கூட தொடாது என்பது மட்டுமே உண்மை.

நான் இன்னும் ஒரு நபர்க்கு மட்டுமே கொடுக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு நீங்கள் சரியானவரா என்று நீங்களே சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். 

பல கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காததை உங்களிடம் கொடுக்கும் போது பல சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ளதான் வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன். இதனை கொடுக்கும்போதே பல தொந்தரவுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள். அதன் பிறகு தான் உங்களுக்கு இது வரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

புதிய நபர்களும் ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: