Followers

Thursday, January 3, 2013

ஆன்மீக அனுபவங்கள் 46



ணக்கம் ண்பர்களே !
              ஆன்மீக அனுபவங்களில் படித்துவிட்டு ஒருவர்  இன்று நல்ல நிலையில் முன்னேறிவிட்டார் அவரைப்பற்றி உங்களிடம் தெரிவிக்கலாம் என்று தான் இந்த பதிவு.

மந்திர அனுபவங்களை பெறுவதற்க்கு நமது தளம் வழியாக வருபவர்களை எடுக்கலாம் என்று முடிவு செய்து அறிவிப்பு அறிவித்தது உங்களுக்கு தெரிந்த விஷயமே. இப்படி முதன் முறையாக தேர்வு செய்தவர் இதுவரை அவரால் மந்திர அனுபவங்களை பெறமுடியவில்லை. அதற்காக காரணம் இப்பதிவில் தேர்வு செய்ப்பட்டுவிட்டார் என்று சொன்னதும் இருக்கலாம் ஏன் என்றால் பல பேர்களின் பொறாமையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த பதிவில் வழியாக வந்த ஒரு பெண்ணை தேர்வு செய்து அதனை வெளியில் நான் சொல்லவில்லை. அவர் என்னை பார்க்க ஒரு நாள் வந்து இருந்தார். அவர் தற்பொழுது accenture யில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரும் இந்த தளத்தினை பார்த்துவிட்டு தான் வந்து இருக்கிறார். அவர் வந்து என்னிடம் பேசும்போது சொன்னார் எனக்கு பூர்வபுண்ணியம் நன்றாக கெட்டுஇருக்கிறது என்று தெரியும். அவர் சோதிடத்தில் நல்ல அறிவு இருக்கிறது. எனக்கு மந்திரங்கள் மேல் ஈர்ப்பு இருக்கிறது, நீங்கள் என்னை தயார்படுத்திவிடுங்கள் என்று சொன்னார்.

நான் சொன்னேன் பூர்வபுண்ணியம் கெட்டு இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் எப்படி இதனை எடுக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார் எப்படி கெட்டாலும் பரவாயில்லை உங்களுக்கு திறமை இருந்தால் எனக்கு கற்று தாருங்கள்.

என்னடா இப்படி சொல்லுகிறாரே நமக்கும் சவால் விடுகிறாரே என்று முடிவு செய்து ஒன்றை சொன்னேன். நான் கற்றுதருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் நீங்கள் என்னை எந்தசூழ்நிலையிலும் என்னுடன் தொடர்பை மட்டும் விட்டுவிடகூடாது என்று சொன்னேன். 

என்னுடைய தொடர்பை விட்டுவிட்டால் உங்களின் பூர்வபுண்ணியத்தின் கெடுதல் பலனை உங்களால் மீறிவரமுடியவில்லை என்று அர்த்தம் என்று சொல்லி அவரிடம் ஒரு வாரம் சென்று வாருங்கள் என்று சொன்னேன். படித்த பெண் அல்லவா புரிந்துக்கொண்டார். 

இவர் என்னை வந்து பார்த்துவிட்டு சென்ற 1 மணி நேரத்தில் அவருக்கு தலைவலி ஆரம்பம் ஆனது. அவரின் மனதில் புரியாத பயம் ஆரம்பித்துவிட்டது. சரி ஏதோ சாதாரணமான தலைவலி தானே என்று நினைத்து மாத்திரை போட்டாலும் அவரால் இருக்கமுடியவில்லை. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மறுநாள் அலுவலகத்திற்க்கு செல்லவில்லை. 

நான் காலையில் வழக்கம்போல் கொட்டிவாக்கம் வந்துவிட்டேன். இவர் என்னிடம் பேசியதை நான் மறந்தேபோய்விட்டேன். காலை 11:30 மணியளவில் எனக்கு போன் செய்கிறார் என்னால் உடம்பு முடியவில்லை என்று பேசமுடியாமல் பேசுகிறார். அவர் தங்கிருப்பது சோழிங்கநல்லூரில் நான் இங்கிருந்து கிளம்பி போய் பார்த்து அவரை சரிசெய்து நார்மலா கொண்டுவந்தேன். பிறகு அவருக்கான சிறிய பயிற்சியை கொடுத்துவிட்டு சரிசெய்துவிட்டு வந்தேன். 

தினமும் என்னை வந்து சந்தித்து பேசுவார். அவருக்கு மந்திரபயிற்சியை கொடுத்தேன். இன்று மந்திரபயிற்சியில் நல்ல நிலையில் இருக்கிறார். ஒரு பூர்வபுண்ணியம் கெட்டஆளை எடுத்து மந்திரபயிற்சி கொடுத்து அவரை ஆன்மீகத்தில் முன்னேற்றி இருக்கிறேன்.அவர் இன்று கேட்கும் ஆன்மீககேள்விக்கு என்னால் பதில் தரமுடியவில்லை அந்தளவுக்கு அவரின் அறிவு வளர்ந்துள்ளது அவர் கேட்ட கேள்விகளுக்கு முடிந்தவரையில் நான் பதில் தந்திருக்கிறேன். அது மந்திரஅனுபவங்கள் பதிவில் வந்துள்ளது அதனை உங்களுக்கு ஒரு நாள் தருகிறேன் படித்துபாருங்கள். அவர் பெண் என்பதால் அவரின் புகைப்படத்தை மற்றும் பெயரை வெளியிடவில்லை

நண்பர்களே நீங்கள் அனைவரும் இதனை கற்கமுடியும் உங்களின் பூர்வபுண்ணியதடையை மீறி வரவேண்டும். அப்பொழுது மட்டுமே இது சாத்தியப்படும். நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



3 comments:

Unknown said...

wow nice....

Unknown said...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..உங்ககிட்டருந்து.....

Enathu Ennangal said...

நானும் மந்திரங்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். உங்கள் மொபைல் எண் கொடுங்கள். நான் உங்களிடம் பேசிவிட்டு எனது ஜாதகத்தை அனுப்புகிறேன். எனது மொபைல் எண் 9789337895. மிக்க நன்றி.