Followers

Wednesday, January 30, 2013

கன்னி : ஐந்தில் சனி


வணக்கம் நண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

கன்னி லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம். சனியின் சொந்த வீடு. சனி சொந்த வீட்டில் அமர்ந்தால் என்ன விட்டுவிடவா போகிறார் என்ன செய்வார் என்று பார்க்கலாம்.

யாரை கெடுத்துருப்பார்?

கன்னி லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீட்டிற்க்கும் ஆறாவது வீட்டிற்க்கும் காரகம் வகிப்பவர் சனி. பெற்ற பிள்ளையை போட்டு தள்ளிருப்பார். எதிரி அல்லது மாமன் இவர்களை போட்டு தள்ளிருப்பார்.

எப்படி கெடுத்துருப்பார்?

நுண்ணறிவை காட்டும் இடத்தில் சனி அமருவதால் மனநிலை பாதிக்கப்பட்டுகூட நடந்திருக்கும். தன்னையறியாமல் கூட செய்திருக்கலாம். அப்படி இல்லை என்றால் சரியான முறையில் திட்டம் தீட்டி கொலை செய்திருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபரே உங்களுக்கு மகனாக பிறந்திருக்ககூடும். வேற என்ன எளிதில் உங்கள் வேலை முடிந்தது.

நண்பர்களே பல நண்பர்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி எழுதுங்கள் என்று கேட்கிறார்கள் முடிந்தளவு தருகிறேன். உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க பூர்வபுண்ணியத்தைப்பற்றி அதிகமான தகவல் வெளிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: