Followers

Tuesday, January 29, 2013

கடகம் :ஐந்தில் சனி


வணக்கம் நண்பர்களே !


                    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கடகராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

கடகராசிக்கு ஐந்தாவது வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு பகை. மிக அதிகமான பாவம் செய்தவர் என்ற கணக்கில் இவர் வருகிறார்.

யாரை கெடுத்துருப்பார்?

கடகராசிக்கு ஏழாவது வீடாக வருவது மகரம் எட்டாவது வீடாக வருவது கும்பம். இரு ராசிக்கும் அதிபதியாக சனியே வருகிறார். சந்திரனுக்கும் சனிக்கும் ஆகாது. இவரின் துணைவரை தான் இவர் போட்டுதள்ளிருப்பார். இது ஆண்களை விட பெண்களாக இருந்தால் எட்டாவது இடம் என்பது மாங்கல்யத்தை காட்டும் இடம் என்பதால் இவரின் தாலியை இவரே அறுக்க காரணமாக இருந்திருப்பார். 

எப்படி கெடுத்து இருப்பார்?

என்ன இருவரும் காதல் திருமணம் செய்து இருந்திருப்பார்கள். அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு கொண்டே இருந்திருக்கும். பொறுமை எல்லை மீறி அவரை கொன்றுருப்பார்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவரை சந்தித்து ஒரு முடிவு எடுத்துக்கொள்ள வேண்டியது. ஒருவன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும்போது அவனை அல்லது அவளை கடைசிவரை காப்பாற்றவேண்டியது ஒவ்வொருவரின் கடமை இதனை தவறினால் கர்மா உங்களை விட்டுவைக்காது. உங்களின் துணையை கொல்லுவது மிகப்பெரிய பாவம். நீங்கள் எங்கு சென்றாலும் இதற்கு பரிகாரம் கிடையாது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


1 comment:

Unknown said...

நல்ல தகவல் . நன்றி