Followers

Saturday, January 19, 2013

பூர்வ புண்ணியம் 16



ணக்கம் ண்பர்களே!

நாம் பல பிறவிகளை எடுத்து இருக்கிறோம் என்பதை பல பதிவுகள் மூலம் உங்களுக்கு விளக்கியுள்ளேன்.இப்பதிவுகளிலும் ஒரு சில கருத்துக்களை பார்க்கலாம்.

நாம் ஒரு சிலரை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். இவரை நாம் எங்கேயே பார்த்திருக்கிறோம் என்று நம் மனதிற்க்கு தெரியும் ஆனால் எங்கு பார்த்தோம் என்பதே மட்டும் ஞாபகம் இருக்காது. நன்றாக சிந்தனை செய்து பார்த்தாலும் தெரியாது ஆனால் அவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும் அது என்ன என்று பார்த்தால் உங்களின் முன்ஜென்மத்தின் மூலம் அவர் உங்களுடன் தொடர்பு கொண்டுருப்பார். 

இப்படி ஒருவரை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அப்படி அவரை பார்த்தால் அவருடன் நீங்கள் பேசி பாருங்கள் கண்டிப்பாக அவருக்கும் உங்களுக்கும் அனைத்து விசயத்திலும் தொடர்பு இருக்கும். இப்படி கூட நீங்கள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி தெரிவதற்க்கு ஒரு வாய்ப்பு இருக்கும். அவரிடம் இதனைப்பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்குள் இருக்கும் ஆத்மாவே அவரை அடையாளம் கண்டுக்கொண்டுவிடும். இப்படிபட்டவர்களுடன் நீங்கள் தொடர்பு வைத்திருக்கும்போது உங்களை அறியாமலே உங்களுக்குள் ஒரு பரவசம் இருக்கும் என்பதை உணரலாம்.

நான் இப்படி பல நபர்களுடன் பழக்கம் ஏற்படுத்தி வைத்துள்ளேன். அவர்கள் அனைவரும் இன்றும் அந்தளவுக்கு பிரியமான நட்புடன் பழக்கம் வைத்திருக்கிறார்கள் இது எப்படி உருவாகியிருக்கும் என்று எனக்கு தெரியும் ஆனால் அவர்களுக்கு இதனைப்பற்றி தெரியவாய்ப்பில்லை. 

இப்படிப்பட்டவர்களை உங்களின் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம் உண்டு என்றால் எனக்கு அதனைப்பற்றி எழுதி அனுப்புங்கள். உங்களின் சுவாரசியமான நிகழ்வை நமது பதிவில் எழுதி அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

நீங்கள் எழுதும்போது உங்களின் கற்பனையை மட்டும் தூண்டி எழுதாதீர்கள். உங்களின் உண்மை சம்பவத்தை மட்டும் எழுதி அனுப்புங்கள். கண்டிப்பாக பல நபர்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: