Followers

Monday, July 29, 2013

குலதெய்வத்தின் அவசியம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நாள் மட்டும் கோயம்புத்தூரில் இருந்து விட்டு இன்று சென்னை வந்துவிட்டேன். நேற்று கோயம்புத்தூரில் சந்தித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது குரு மற்றும் அம்மனின் ஆசி கண்டிப்பாக கிடைத்திருக்கும். நான் எந்த ஊருக்கு சென்றாலும் நமது நண்பர்களின் வீடுகளில் சென்று சந்திப்பது எனது பழக்கம். அதற்கு காரணம் ஏன் என்றால் நான் பழக்குவது சாமியார்கள் அவர்களின் ஆசி எனது வழியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் நான் வீட்டுக்கு செலகிறேன்.

இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் வழிபாடு செய்கிறார்கள் ஆனால் இருப்பதில்லை. 

என்ன காரணம் குலதெய்வத்தின் அருளை அவர்களின் பங்காளிகள் நயவஞ்சகமாக எடுத்துவிடுகிறார்கள். மாந்தீரிகனை வைத்து எடுக்கும்பொழுது அவர்களின் குலதெய்வத்தின் முழுமையான சக்தியை எடுத்துவிடுகிறார்கள். அனைவரும் பயன்படவேண்டும் அதோடு நாமும் பயன்படவேண்டும் என்று நினைப்பதில்லை. முழுமையான சக்தியை அவர்களின் பக்கம் திருப்பிவிடுகிறார்கள். இது தவறு. நான் பல பேர்க்கு குலதெய்வதின் அருளை எடுத்துக்கொடுத்து இருக்கிறேன். இவர்களுக்கு அந்த அருள் கிடைக்கும்படி செய்வனே தவிர மொத்தமாக எடுத்துவிடமாட்டேன். அனைவரும் நன்றாக இருக்கும்பொழுது நாமும் நன்றாக இருப்போம். 

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. நான் பலபேர்களுக்கு ஹோமம் செய்து கொடுக்கும்பொழுது கூட அவர்களின் குலதெய்வம் அவர்களுக்கு நன்றாக செய்து தரும்படி தான் செய்வேன். நமது அம்மன் வழியாக அந்த தெய்வம் செயல்பட்டு அவர்களுக்கு நல்லது செய்யும்.

என்னால் முடிந்தளவுக்கு பல வீடுகளில் குலதெய்வத்தை எடுத்து நல்லது செய்துக்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் இந்த மாதிரி செய்ய வேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள். செலவு என்பது எல்லாம் குறைந்தளவு தான் வரும். நான் யாரிடமும் இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதில்லை.  பணம் இருப்பவர்கள் நன்றாக கொடுக்கலாம். பணம் இல்லாதவர்கள் இருப்பதை கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பணம் நல்லவழிகளுக்கு செலவு செய்யப்படுகிறது. அதனைப்பற்றி வெளியில் சொல்லவில்லை. கண்டிப்பாக நல்லவழிக்கு செலவு செய்யப்படுகிறது என்பது எனது நெருங்கிய வட்டத்திற்க்கு மட்டும் தெரிந்த ஒன்று.

ஆத்மசுத்தி மட்டும் பணம் செலவு அதிகம் ஆகும் அது ஏன் என்றால் அதிக ரிஸ்க் உள்ள விசயம் அதனால் அந்த பணம் கேட்கபடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

I-GOD said...

we are in malaysia ,can you help us ?