Followers

Tuesday, July 30, 2013

குலதெய்வ சக்தி


வணக்கம் நண்பர்களே!
                     சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். அந்த அனுபவங்கள் உங்களுக்கு நன்றாக பயன்படும் என்ற காரணத்தால் இதனை பகிர்ந்துக்கொள்கிறேன். அனைத்தும் உண்மையான தகவல்.

சேலத்தில் எனது நண்பர் வழியாக ஒருவர் எனக்கு பழக்கம். ஒரு அம்மா மட்டுமே என்னுடன் தொடர்பில் இருந்துக்கொண்டு வந்தார்கள். அந்த அம்மா நல்ல பக்திமான். அவருக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்று கண்டுபிடித்தேன். அவர்களுக்கு ஏகாப்பட்ட கஷ்டம் இருந்தது. குலதெய்வம் அருள் இல்லை அதனால் தான் இவர்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது. குலதெய்வத்தை எடு்த்துக்கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரு நாள் தேதியையும் கொடுத்து அதற்கான வழியை சொல்லி அனுப்பினேன்.

நான் அங்கு செல்லவில்லை. நாம் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் செய்வதுவிடுவதால் நீங்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தில் எனக்கு போன் செய்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லிருந்தேன். அவர்களின் வீட்டில் அப்படியே செய்தார்கள். பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டார்கள். அன்று இரவு பார்த்தால் அவர்களின் குடும்பத்தில் ஏன் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் இருக்கிறது என்று தெரிகிறது. 

அவர்களின் குடும்பத்தில் முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணிற்க்கு தீங்கு செய்திருக்கிறார். அபாண்டமாக பலி சுமத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.அந்த பெண்ணின் ஆத்மா அவ்வளவு கோரமாக இருக்கிறது. அவர்களின் குலதெய்வத்தையே அது கட்டுபடுத்திவிட்டது அதனால் அவர்களின் குடும்பம் அழிவை நோக்கி சென்று்க்கொண்டுள்ளது. அதனை தடுப்பதற்க்கு உடனே அதற்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவர்களின் குடும்பத்திற்க்கு குலதெய்வத்தின் அருளை பெற்று தந்தேன். 

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு ஆத்மாவிற்க்கு நாம் கெடுதல் செய்தால் அது நம்மை தாக்கும். அதற்கு ஒரு வழி தான் குலதெய்வத்தை தடுப்பது. ஏன் ஆத்மா குலதெய்வத்தை தடுக்கிறது என்றால்  குலதெய்வத்தின் அருள் இருந்தால் இவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணிக்கொண்டு குலதெய்வத்தை முடக்குகிறது.

அந்த ஆத்மாவை குலதெயவத்தால் தடுக்கமுடியாது என்று கேட்கதோன்றும். ஒரு ஆத்மா தன்னை பலி வாங்கியவனை பலி வாங்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது குலதெய்வம் விலகிவிடுகிறது. இவர்களும் ஒழுங்காக குலதெய்வ வழிபாடு செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு இப்பேர்ப்பட்ட பிரச்சினையை ஏற்படு்த்தியது.

அந்த ஆத்மாவிற்க்கு தேவையான விசயங்களை கொடுத்து அந்த ஆத்மாவை திருப்திபடுத்தி அதன் பிறகு குலதெய்வ அருள் கிடைக்க வழிசெய்யவேண்டும். இது எல்லாம் நான் அங்கு சென்று செய்வதில்லை. என்னுடைய இடத்தில் இருந்தே அதனை செய்துமுடித்துவிடுவேன். 

ஒவ்வொரு குலதெய்வத்திடம் நாம் செல்லும்பொழுது ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படுகிறது. மனிதன் செய்யும் ஒரு சிறு தவறு அவனை மட்டும் இல்லாமல் அவனது வம்சத்தையே பலிவாங்குகிறது.நமக்கு அனைத்திலும் காப்பது நமது குலதெய்வம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

I-GOD said...

Dear ,

how to find kulatehivam as my ancestors never mention on it