Followers

Sunday, December 22, 2013

குரு தசா பலன்கள் பகுதி 49


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனிபுத்தியை பார்த்து வருகிறோம். கடைசி வீடான பனிரெண்டாவது வீட்டில் சனி அமர்ந்து புத்தியை நடத்தினால் எப்படி பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்த்துவிடலாம்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து புத்தியை நடத்தினால் அதிகமான விரையங்களை கொடுக்கும். மருத்துவ செலவு இருக்கும். பயணங்கள் மருத்துவமனையாக கூட இருக்கலாம். ஒரு சிலருக்கு நன்றாக அமர்ந்து புத்தி நடத்தினால் யாத்திரைகள் போவார்கள். பல கோவில்களை தரிசிப்பார்கள்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து மூன்றாவது பார்வையில் இரண்டாவது வீட்டை பார்ப்பார். குடும்பத்தில் அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திவிடுவார். சந்தேகபுத்தியை ஏற்படுத்துவார். குடும்ப உறவுகள் பிரச்சினையை சந்திக்கும்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் இருந்து நேரடியான பார்வையில் ஆறாவது வீட்டை பார்ப்பார். கடன் தொந்தரவு ஏற்படாது. நோய்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருக்கும்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் இருந்து பத்தாவது பார்வையாக ஒன்பதாவது வீட்டை பார்க்கும் ஊரில் மரியாதை கிடைக்கும். ஊர் பெரியவர்கள் உங்களுக்கு மரியாதை தருவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

தமிழ்செல்வன் said...

வனக்கம் ஐயா..
எனக்கு ஒரு ஐயம்..
அதாவது ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்துகொண்டு பார்க்கும் இடத்தை வைத்தும் பலன் சொல்வதுண்டு.

குறிப்பாக
மூன்றாவது பார்வைக்கு நல்லது அல்லது கெட்ட்து என்றும்
ஏழாவது பார்வைக்கு நல்லது அல்லது கெட்ட்து என்று இருக்கிறதா....?
அதை எவ்வாறு தெரிந்துகொள்வது...?

rajeshsubbu said...

வணக்கம்
ஒவ்வொரு ராசியிலும் நின்று பார்க்கும்பொழுது பலன் மாறுப்படும். எல்லாவற்றையும் எழுத நேரம் இல்லை. நேரம் இருக்கும்பொழுது எழுதுகிறேன்.
நன்றி