Followers

Wednesday, December 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 57


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். புதன் ஒவ்வொரு வீட்டிலும் நின்ற தன்னுடைய புத்தியை நடத்தினால் என்ன பலன் வரும் என்பதை இப்பதிவில் பார்த்துவிடலாம். 

லக்கினத்தில் புதன் நின்றால் உலக விசயங்களை பற்றி நல்ல அறிவு இருக்கும். உடல் தோற்றம் பிறரை வசீகரிக்க செய்யவார்கள். மனைவியுடன் ஒற்றுமை இருக்கும். பல தோஷங்கள் விடுபடும். 

லக்கினத்தில் புதன் இருந்தால் ஆயிரம் தோஷங்களை நிவர்த்தி செய்யும் வல்லமை உடையது. புதனின் புத்தியில் உங்களுக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் போகும் என்று சொல்லலாம்.

இரண்டாவது வீட்டில் புதன் நின்று தன் புத்தியை நடத்தினால் பேச்சில் இனிமை இருக்கும். அதே நேரத்தில் நல்ல கேலி செய்து பேசுவார்கள். இவரின் பேச்சை பிறர் ரசிப்பார்கள். தனவீட்டில் இருந்து புத்தியை நடத்துவதால் பணவரவுக்கும் பஞ்சம் இருக்காது.

வீட்டில் விழாகாலம் வரும். ஏதாவது ஒரு நல்ல சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களை அழைத்து நீங்கள் உபசரிப்பீர்கள். இரண்டு வழியில் மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir, if budhan with sevvai in magara lagna means wat ll be effect...

rajeshsubbu said...

வணக்கம் கண்டிப்பாக சொல்லுகிறேன். பொருத்துங்கள்.
நன்றி