Followers

Saturday, October 11, 2014

கடல் குளியல்



வணக்கம் நண்பர்களே!
                    கோவளம் பீச்சிற்க்கு சென்று வந்து இருந்தேன். அதனைப்பற்றி உங்களிடம் சொன்னேன் அந்த பீச்சில் நான் குளிக்கவில்லை. சரி அதில் என்ன விஷேசம் இருக்கிறது. 

இராமேஸ்வரத்தில் உள்ள கடலில் நீங்கள் குளித்துவிட்டு பிறகு நீங்கள் தீர்த்தத்தில் குளிக்க சொல்லுவார்கள். கடலில் குளிக்கும்பொழுது உங்களின் சூட்சம உடல் சுத்தப்படுத்தப்படும் என்பதற்க்காக இந்த மாதிரி முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

கடலில் உள்ள உப்பு நீர் உங்களின் சூட்சமசரீரத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் நீங்கள் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையாவது கடலில் சென்று குளித்துவிட்டு வாருங்கள். 

நான் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இராமேஸ்வரம் சென்று விட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். அதனையும் கடைபிடியுங்கள் அதே நேரத்தில் கடலில் குளிப்பதையும் கடைபிடித்து வாருங்கள். கடல் குளியல் கர்மத்தை கண்டிப்பாக நீக்கும் சக்தி உள்ளது

கடலில் குளிக்கும்பொழுது எச்சரிக்கையுடன் குளியுங்கள். நமது நோக்கம் கடலிக் குளித்துவிட்டு வருவது மட்டுமே ஆழமான பகுதிக்கு செல்லாமல் கரைபகுதியில் குளித்துவிட்டு வந்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.