Followers

Tuesday, October 14, 2014

மாற்றம்


வணக்கம் நண்பர்களே!
                    எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் செய்ய வேண்டியதை செய்ய தொடங்கினால் மட்டுமே இப்பிறவியில் இருந்து விடுபடலாம். பரிகாரங்களை நான் எழுதிக்கொண்டு வந்தாலும் அதனை செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும்.

பரிகாரங்களை செய்வதைவிட நாம் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றினாலும் நாம் நினைத்தை அடையமுடியும். நமது பழக்கவழக்கங்களால் நாம் கட்டுப்பட்டு கிடப்பதால் நமது பிரச்சினையை தீர்க்கமுடிவதில்லை. 

மூச்சுப்பயிற்சி செய்யவேண்டும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள் இதனை செய்யாமல் வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தால் அதற்கும் இயல்பாகவே ஒரு வழி இருக்கிறது. விடியற்காலை மூணரை மணிக்கு நீங்கள் எழுந்துவிட்டால் மூச்சுப்பயிற்சி செய்யவேண்டியதில்லை. விடியற்காலையில் எழுவதில் அவ்வளவு விசயம் இருக்கிறது.

பரிகாரத்தை பூஜை முறையில் நாம் செய்துக்கொண்டிருப்பதைவிட நமது பழக்கவழக்கத்தில் சின்ன மாற்றத்தை கொண்டுவந்தும் நாம் நினைப்பதை அடைந்துவிடமுடியும். மாற்றத்தை நாம் கொண்டுவந்துவிட நாம் முதலில் விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால் கண்டிப்பாக மாற்றம் உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

3.30 manikku elunthirukka mudiyuma 5.30 kke thukkam thalluthu bro.