Followers

Friday, May 12, 2017

பித்ருதோஷம்


வணக்கம்!
          பித்ரு தோஷத்தைபபற்றி நண்பர் ஒரு கேள்வி கேட்டார். பித்ருதோஷ நிவர்த்திக்கு இராமேஸ்வரத்திற்க்கு சென்று திலா ஹோமம் செய்யலாமா மறந்த திதிக்கு என்ன செய்வது என்று கேட்டார்.

இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் நடத்தலாம். அது வாழ்நாளில் ஒரு முறை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். உண்மையில் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது எல்லாம் ஒரு வகையில் நல்லது என்றாலும் அங்கு செய்யப்படும் திலா ஹோமம் உண்மையான திலா ஹோமமா என்று சந்தேகம் எழும்புகிறது.

எனக்கு தெரிந்து அங்கு இருக்கும் புரோகிதர்கள் சொல்லும் மந்திரம் எல்லாம் வீண் என்று தான் தோன்றுகிறது. நிறைய செலவு செய்து புரோகிதர்களை அமர்த்தி செய்தாலும் அவர்கள் சரியாக செய்வதில்லை. ஏனோ தானோ என்று தான் செய்கின்றனர்.

நிறைய செலவு செய்து நாம் அதில் இருந்து எதுவும் பயன்பெறுவதில்லை என்று தான் தோன்றுகிறது. ஒரு முறை நம்முடைய கடமையை செய்வதற்க்காக வேண்டுமானால் செய்யலாம். இராமேஸ்வரம் சென்று அங்கு உள்ள புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு வருவது மிகவும் நல்லது. புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு வருவதால் நமக்கு நன்மை தரும்.

மறந்த திதியை நீங்கள் மாசி மகத்திற்க்கும் புரட்டாசியில் வரும் அமாவாசை அன்றும் திதி கொடுக்கலாம். தனியாக வேறு நாட்களில் சென்று திதி கொடுக்கப்படவேண்டியதில்லை. 

ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் முன்னோர்களுக்கு நீங்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை செய்து வந்தால் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். உங்களின் வாரிசுகளும் நன்றாக இருக்கும். எந்த ஒரு செயலையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது உங்களுக்கு நன்மை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Thank you very much Sir...