Followers

Thursday, May 25, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நேற்று மனதை சுத்தப்படுத்துவது எப்படி என்ற பதிவை படித்துவிட்டு ஐம்பது வயதிற்க்கு மேற்பட்டவர்கள் எல்லாம் போன் செய்து எங்களுக்கு பொழுதுபோக்கிற்க்கு அது மட்டும் தான் இருந்தது. அதனையும் விட்டுவிட்டு எப்படி சார் இருக்கமுடியும் என்று கேட்டார்கள்.

உங்களுக்கு பேரக்குழந்தைகள் வந்துவிட்டன. இனி செய்வதற்க்கு ஒன்றும் இல்லை எனும்பொழுது வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் எழுதுவது ஒருவர் அதிக பிரச்சினையில் இருந்து அவர் மேல் வர நினைக்கிறார் என்றால் அவர்க்கு நாம் சொல்லுவதை அனைத்தையும் பின்பற்றலாம்.

நல்ல நிலையில் இருப்பவர்கள் அனைத்தையும் பின்பற்ற தேவையில்லை. ஆன்மீகவாதிகளாக இருந்தால் அனைத்தையும் பின்பற்றி தான் இருக்கவேண்டும். நல்ல சக்தியோடு இருக்கவேண்டும் எனும்பொழுது இதனை பின்பற்றினால் நல்ல சக்தி இருக்கும்.

எனக்கு அடிக்கடி போன் வந்துக்கொண்டு தான் இருக்கும். நான் என்னுடைய தேவைக்காக அதனை பயன்படுத்துகிறேன். மற்றபடி அதனை தொடுவதில்லை. உங்களுக்கு அதில் வேலை இருந்தால் தொடவேண்டும் இல்லை என்றால் அதனை ஒதுக்கிவிடலாம்.

ஏதோ ஒரு பிரச்சினை என்றால் நான் உங்களுக்கு செய்யும் பரிகாரம் உடனே வேலை நடக்கவேண்டும் என்றால் அதனை நீங்களும் நல்ல சக்தியோடு இருந்தால் எளிதில் நடந்துவிடும். நீங்கள் சக்தியோடு இல்லை என்றால் இழுத்துக்கொண்டு நடக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: