Followers

Sunday, May 14, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          ஏழில் மாந்தி நின்றால் அந்த நபருக்கு அதிகபட்சம் திருமணம் நடப்பது காதல் திருமணமாக இருக்கும். காதலித்து அதன் வழியாக திருமணம் நடைபெறவைத்துவிடும். அது என்ன காதலித்து என்பது பார்த்து வைக்கும் திருமணத்திலும் காதல் இருக்கின்றது. பெண்ணும் ஆணும் அவர்களே பார்த்து காதல் திருமணத்தை தான் காதலித்து திருமணம் என்கிறேன்.

பிற ஜாதியில் திருமணம் நடப்பதற்க்கு அதிகப்பட்சம் மாந்தி வழிவகுக்கும். ஏழில் மாந்தி நிற்க்கும்பொழுது அவர்களின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் நடக்கும். தனியாக குடும்ப வாழ்க்கையை வாழ வைக்கும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் ஏழில் மாந்தி நின்றது. அவருக்கு திருமணம் காதல் திருமணம். அவர்கள் காதலித்து திருமணம் செய்த நாளிலில் இருந்து இருவர் வீட்டிலும் எந்த வித தொடர்பும் இல்லாமல் செய்துவிட்டது. இன்று வரை அப்படியே வாழ்கின்றனர்.

காதல் திருமணத்தையும் கொடுத்து குடும்பத்தையும் சேரவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஒரு பெண்ணிற்க்கு ஏழில் மாந்தி நின்றது. அந்த பெண் ஒரு திருமணம் ஆனவருடன் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்துக்கொண்டது.

என்னங்க இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். ஏகாப்பட்ட நிகழ்வுகள் இப்படியும் நடக்கின்றது. நாம் என்ன செய்வது அனைத்தும் கிரகத்தின் வேலையாக இருக்கின்றது.

உங்களுக்கு உங்களின் குடும்பத்தினர்க்கு இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தால் நீங்கள் உடனே மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: