Followers

Friday, May 19, 2017

பரிகாரம்


ணக்கம்!
          மாந்தி பரிகாரம் அறிவித்தவுடன் இலவச பரிகாரத்திற்க்கு அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எப்பொழுதும் இலவச பரிகாரத்திற்க்கே அனுப்பவேண்டுமா என்றும் ஒரு சிலர் நினைத்துக்கொண்டு வெட்கப்பட்டு இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

ஆண்டு முழுவதும் இலவச பரிகாரத்திற்க்கு நீங்கள் ஜாதகத்தை அனுப்பினால் கூட நீங்கள் ஏன் இலவச பரிகாரத்திற்க்கே அனுப்புகின்றீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஒருவர் ஏதோ ஒரு வழியில் பயன் அடைந்தால் போதும் என்று நினைப்பவன் நான். வெட்கப்படாமல் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.

முக்கால்வாசி தமிழ்சோதிடத்தில் மாந்தியின் நிலையை குறிக்காமல் வைத்திருக்கின்றனர். ஒரு சிலர் என் ஜாதகத்தில் மாந்தி இல்லை என்று சொல்லிருந்தனர். தமிழ்நாட்டில் தற்பொழுது ஜாதகம் எழுதும் சோதிடர்கள் தான் மாந்தியை பற்றி குறிக்கின்றனர்.

உங்களின் ஜாதகத்தில் மாந்தியை பற்றி குறிக்கவில்லை அதனால் ஜாதகத்தை அனுப்பவில்லை என்று நினைப்பவர்கள் உங்களின் பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊரை பற்றி அனுப்பி வைத்துவிடுங்கள். நான் பார்த்துக்கொண்டு உங்களுக்கு மாந்தி பரிகாரத்தை செய்துவிடுகிறேன்.

பொதுபரிகாரம் ஏதோ பெயர்க்கு நடத்தாமல் அதன் வழியாக நன்மையை செய்ய வேண்டும் என்று தான் ஜாதககதம்பத்தில் நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள். உங்களின் வளரச்சிக்கு கண்டிப்பாக இது பயன்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: