Followers

Sunday, May 14, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி ஏழில் நின்றால் ஒருவருக்கு காதல் திருமணம் என்று சொன்னோம். ஒரு சிலர்க்கு மாந்தி ஏழில் நின்றால் திருமணமே நடைபெறாத ஒரு வாழ்க்கையும் கொடுத்துவிடும். திருமணத்திற்க்கு பெண் பார்க்க அலைந்து திரிந்தால் கூட ஒன்றும் நடக்காது. கிணற்றில் போட்ட கல் போன்று திருமண பேச்சு இருக்கும்.

திருமணத்தை முடித்து வைக்கிறேன் என்று நிறைய திருமண புரோக்கர்களிடம் ஏமாந்து போகும் ஒரு நிலையை கூட ஏழில் நிற்கும் மாந்திக்கொடுக்கும். ஒரு சில ஜாதகர்கள் காதல் தோல்வியை கூட சந்தித்து திருமணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.

ஏழில் நிற்க்கும் மாந்தி ஒரு சில ஜாதகர்களுக்கு உடல்நிலையில் ஊனத்தை ஏற்படுத்தி விடும். ஊனத்தோடு பிறப்பவர்களாகவும் ஒரு சிலர் இருப்பார்கள். இடையிலும் ஊனம் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம்.

ஏழில் நிற்க்கும் மாந்தி ஜாதகர்களின் துணைக்கு ஆயுள் கண்டத்தையும் ஏற்படுத்தகூடிய வாய்ப்பும் இருக்கின்றது. ஏழில் மாந்தி நின்று திருமணம் செய்தாலும் சரி அல்லது கூட்டு வியாபாரம் செய்தாலும் சரி கொஞ்சம் பார்த்து நிதானமாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட அமைப்பில் உங்களின் ஜாதகம் அல்லது உங்களின் வீடடில் உள்ளவர்களின் ஜாதகம் இருந்தால் மாந்தி பரிகாரத்திற்க்கு அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: