Followers

Wednesday, May 31, 2017

அனுபவ சோதிடம்


வணக்கம்!
          சோதிடநூல்கள் சொல்லும் காரத்துவம் மற்றும் விதிகள் எல்லாம் பல இடங்களில் பொய்யாகவும் இருக்கின்றது என்பது பல வருடங்கள் சோதிடதொழிலை செய்து வருபவர்களுக்கு புரியும்.

நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் கிரகத்தின் காரத்துவத்தில் ஒரு விசயம் இல்லாமல் வேறு ஒரு கிரகத்தின் காரத்துவத்தில் அந்த கிரகம் வேலை செய்கிறது என்பது நன்றாக சோதிடம் பார்ப்பவர்களுக்கு தெரியும்.

பல சோதிடர்கள் அனுபவத்தில் பல விசங்களை தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் அதனை வெளியில் சொல்லுவதில்லை. வெளியில் சொன்னால் யாருக்கும் ஏற்கபோவதில்லை என்று சும்மா வழக்கம் போல் உள்ள கிரகத்தின் காரத்துவத்தேயே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 

ஒவ்வொரு கிரகத்தின் காரத்துவத்தை எடுத்துக்கொண்டு அனுபவத்தில் அந்த காரத்துவத்தில் தான் கிரகங்கள் இருக்கின்றனவாக என்று சிந்தனை செய்து பார்த்தால் உங்களுக்கு இது தெரியவரும்.

எல்லாமே தவறு கிடையாது. ஒரு சில விசங்கள் மட்டும் உங்களுக்கு தவறுதல்களாக தெரியவரும். இதனை உங்களின் ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: