Followers

Thursday, September 28, 2017

கர்மாவும் தொழிலும்


ணக்கம்!
         தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சிலர் தொழிலை செய்யும்பொழுது எனக்கு கர்மா வரும் என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள்.

ஒரு முறை இந்தந்த ராசிக்காரர்கள் இந்த தொழிலை செய்யக்கூடாது என்று எழுதியிருந்தேன். அப்பொழுது ஒருவர் சார் நான் தங்கதொழில் செய்கிறேன். இதனை நான் செய்தால் எனக்கு கர்மா வருமா என்று கேட்டார்.

உங்களுக்கு பிடித்த தொழிலை நீங்கள் விரும்பி அதனை செய்யும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு கர்மா என்பது வராது. செய்கின்ற தொழில் என்பது கடவுளால் மற்றும் உங்களின் உழைப்பால் வந்தது. 

கசாப்புகடை வைத்து நடத்துபவர்களுக்கு அந்த தொழில் இருந்து கர்மா வரவே வராது என்பது தான் உண்மை. அதனால் உங்களுக்கு பிடித்த தொழிலை நீங்கள் விரும்பி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு கர்மா வராது.

நாம் செய்கின்ற தொழிலில் நேர்மை என்பது இருக்கவேண்டும். சும்மா இஷ்டத்திற்க்கு செய்யும்பொழுது மட்டுமே அது பிரச்சினையை தருகிறது. செய்கின்ற தொழிலால் கர்மா வருவதில்லை நேர்மையின் தன்மையில் இருந்து தான் கர்மா வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: