Followers

Thursday, June 13, 2013

ஆன்மீக அனுபவங்கள் 96


வணக்கம் நண்பர்களே!
                     நமது நண்பர்கள் காலையில் ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு நாங்கள் உங்களின் பதிவை படிப்பதே ஏதாவது ஆன்மீக சம்பந்தப்பட்ட உணர்வுகள் நடைபெறும் என்பதால் தான் படிக்கிறோம் ஆனால் குரு இருந்தால் தான் நடைபெறும் என்று சொல்லிவிட்டீர்கள் என்று சொன்னார்கள்.

நான் எப்பொழுதும் உங்களிடம் உண்மை தான் சொல்லுகிறேன். நல்ல குரு தேவை என்று ஆரம்பகாலத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு வருகிறேன். குரு கிடைக்க நானே வழி செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். உங்களின் புரியாமையை தான் இது காட்டுகிறது. நான் குருவை காட்டினால் மட்டும் போதாது அந்த குருவுக்கு உங்களை பிடிக்க வேண்டும். அவர்கள் சில சட்டதிட்டங்களை எல்லாம் சொல்வார்கள் அதற்கு நீங்கள் கீழ்படிய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அது முடியுமா என்பது மில்லியன் கேள்விகள் எழும். நீங்கள் தேடும்பொழுது உங்களின் ஆத்மாவிற்க்கு சந்தோஷமான குருவை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நான் தேடி தந்தால் எப்படி இருக்கும்.

இந்த பதிவுக்கு வரும் பாதிபேர் காயத்ரி மந்திர பயிற்சியை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் ஒரு வேண்டுகோலாக உங்களின் தெய்வத்திடம் வையுங்கள். எனக்கு ஒரு நல்ல குருவை காட்டிக்கொடு என்று கேளுங்கள். அந்த தெய்வம் உங்களுக்கு வழிகாட்டும். குருவை தேடினால் மட்டும் போதாது அதற்கு நாம் போகமுடியுமா என்று நீங்கள் உங்களை கேள்வி கேட்டுக்கொள்வது நல்லது.

தன்னை தயார்படுத்திக்கொள்வது நல்லது. நாம் அதற்கு சென்றால் அதனை விட்டு எந்த சூழ்நிலையிலும் வெளிவரமாட்டேன் என்று நினைக்கவேண்டும். குரு கேட்பதை நிறைவேற்றி் கொடுக்க வேண்டும்.நாம் முக்கியமான வேலையில் இருப்போம். அப்பொழுது குரு கூப்பிடுவார் அதற்கு நாம் போகவேண்டும். அவர் சொன்னதை செய்துகொடுத்துவிட்டு வரவேண்டும்.

நம் மனதை நாம் கேட்டுவிட்டு ஆன்மீகத்திற்க்கு வருவது நல்லது. நம் மனம் அதற்கு தான் ஏங்குகிறதா என்றும் கேட்பது நல்லது. பல புத்தகத்தை படிப்பதால் மற்றம் பிளாக்கை படித்து விட்டு ஆன்மீகத்தை தேடிவருகிறேன் என்று ஆன்மீகம் பக்கம் வந்தால் பிரச்சினையை தான் வரும். ஆத்மா தேடுகிறதா என்று பார்க்க வேண்டும். ஆத்மா தேடும்பொழுது மட்டுமே ஆன்மீகம் வரும்.

ஆத்மா ஆன்மீகத்தை தேடுகிறது என்றால் அடுத்தது என்ன செய்ய வேண்டும். நமது ஆத்மா அதற்கு ஏற்றது போல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். நமது ஆத்மா பலமான ஆத்மாவாக இருக்கிறதா அல்லது பலமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஆத்மாவிற்க்கு தான் ஆன்மீகமே தவிர உடலுக்கு கிடையாது. அதற்க்கான வழி காயத்ரி மந்திரத்தில் இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: