Followers

Saturday, June 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 97


வணக்கம் நண்பர்களே!
                     இன்று ஒரு முக்கியமான ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளபோகிறேன். நான் அம்மனை பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். அம்மனை தான் எடுக்கவேண்டும் என்று எல்லாம் உங்களிடம் சொல்லிருக்கிறேன். சிவன், பெருமாள் எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லுவேன். 

நான் அப்ப சிவனை கும்பிடமாட்டேனா என்றால் கண்டிப்பாக கும்பிடுகிறேன். இது சூட்சமான ஒரு விசயம். நான் அம்மனை வைத்து சிவனை கும்பிடுகிறேன். ஏன் என்றால் சிவன் பெருமாள் எல்லாம் ஹ வோல்டேஸ் மாதிரி நேரடியாக போனால் நாம் காலியாக வேண்டியது தான். நான் அம்மனை கும்பிடுவதால் அம்மன் எனக்கு அம்மாவாக இருப்பாள். அம்மா மூலம் அப்பனை அடைவது எளிதான ஒன்று. அம்மா நம்மோடு இருக்கும்பொழுது நமக்கு அப்பன் எந்த வித தொந்தரவும் கொடுக்கமாட்டார். 

இந்த வழியை தான் நாங்கள் பின்பற்றுகிறோம். எனது குருநாதர் காட்டிய வழி இது. ஏன் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் கூட இப்படி தான் அவர்கள் போய் சேருவார்கள். ஒரு சில சந்நியாசிகள் மட்டும் நேரிடையாக செல்வார்கள். சந்நியாசிகளுக்கு அது ஒத்துவரும். இல்லறவாசிகள் அம்மன் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது. அம்மனை வைத்துக்கொண்டு நீங்கள் சிவனை அடையவேண்டும். தாயாரை வைத்துக்கொண்டு பெருமாளை அடையவேண்டும் இது இல்லறவாசிகளுக்கு உரிய வழி.

அம்மன் உங்களோடு இருந்தாலும் சிந்தனையில் சிவனை நினைத்துக்கொண்டே செல்லவேண்டும். இப்படி சென்றால் தான் நீங்கள் செல்லும் ஆன்மீகவழி சரியான வழியாக இருக்கமுடியும். நீங்களே பல கோவில்களில் பார்த்து இருக்கலாம். அதுவும் சிவன் கோவிலாக இருந்தால் அம்மனுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள். அம்மா பேரை முதலில் போட்ட பிறகு தான் அப்பன் பேரை பெயராக போடுவார்கள். கோவிலுக்கு அதிகமாக இல்லறவாசிகள் தான் செல்வார்கள். அதனால் நீங்கள் அம்மனை வைத்துக்கொண்டு சிவனையோ பெருமாளையோ அடையமுயற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: