Followers

Wednesday, June 12, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று நான்கு பதிவாவது போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் குரு அவசரமாக கூப்பிட்டதால் சென்றுவிட்டேன்.  நமது அம்மாவிற்க்கு அடுத்தவாரம் பூஜை செய்யலாம் என்று முடிவு எடு்த்திருக்கிறேன். நேற்று எனது குருவும் சொன்னார் நான் அந்த அம்மனிடமே சென்று அங்கேயே தங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். நானும் தாராளமாக தங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

உலகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் புனிததீர்த்தங்கள் பல காலங்கள் தவம் இருந்த ஒரு சந்நியாசி அங்கு சென்று தங்குகிறேன் என்று சொன்னால் அம்மனின் சக்தியை என்ன என்று சொல்லுவது. அபபேர்பட்ட சக்தி உங்களுக்கு கிடைக்கிறது. அதனை நீங்கள் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது உங்களின் திறமை. நான் பலபேர்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால் அந்த அம்மனின் சக்தியை பயன்படுத்துக்கிறேன்.

பல நாட்களுக்கு முன்பே உங்களிடம் சொல்லிருக்கிறேன். ஒரு நாள் நமது பதிவில் இருக்கும் அம்மனிடம் ஒரு வேண்டுதலை வையுங்கள் அதன் பிறகு பாருங்கள் ஒரு நாள் உங்களை அது ஆபத்துக்காலத்தில் காப்பாற்றும். அந்த உதவும் நேரத்தில் யாரால் இந்த உதவி கிடைத்தது என்பதும் உங்களுக்கு தெரியும். 

கலியுகத்தில் நமக்கு ஆபத்து என்பது பல்வேறு விதத்தில் வரும். நாம் நன்றாக இருந்தாலும் பிறர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்பொழுதே ஒரு பிராத்தனையை செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் பிராத்தனை அது உங்களுக்கு எப்படி திரும்பிவருகிறது என்பதை பார்த்துக்கொள்ளலாம். 

வரப்போகிற பிரச்சினைக்கு நான் பிராத்தனை சொல்லிருக்கிறேன். வந்த பிரச்சினைக்கு எப்படி பிராத்தனை செய்வது என்றால் அது பிரசசினையை பொருத்து அமையும். சிறிய பிரச்சினை என்றால் நீங்கள் ஒரு பிராத்தனை மூலம் செய்துக்கொள்ளலாம். பெரிய பிரச்சினை என்று வந்துவிட்டால் நீங்கள் கண்டிப்பாக அம்மனுக்கு ஏதாவது செய்து தான் அதில் இருந்து விடுபடவேண்டும். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அன்னதானம் ஹோமம் இன்னமும் நிறைய இருக்கிறது இப்படி ஏதாவது செய்து தான் அந்த பிரச்சினையில் இருந்து விடுபடமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: