Followers

Saturday, June 1, 2013

கேள்வி& பதில்

வணக்கம் நண்பர்களே!
                    அன்னையின் அருளைப் படித்துவிட்டு ஒரு நண்பர் பின்னோட்டத்தில் எதிராக பதில் அனுப்பியுள்ளார். அதனை நான் வெளியில் விடவி்ல்லை. தேவையற்ற பின்னோட்டங்களை அனுமதிப்பதில்லை. இருந்தாலும் அவர் கேட்டதற்க்கு ஒரு பதிலை மட்டும் பதிவாக தருகிறேன்.

இந்துமதத்தில் மட்டும் முக்கியமான ஒரு விசயம் இருக்கிறது அதனைப் பற்றி சொல்லவேண்டும் என்பதால் சொல்லுகிறேன். ஒருவனுக்கு நீங்கள் தீங்கு செய்தால் கண்டிப்பாக அதனை நீங்கள் அனுபவிக்கவேண்டும். அந்ந தீங்கு உங்களுக்கு பல மடங்கு திரும்பிவரும். இங்கு பாவமன்னிப்பு என்பது கிடையாது. ஒரு ஏழையை ஒருவன் வஞ்சித்தால் அவனை அவன் வணங்கும் அம்மன் திரும்பி வஞ்சிப்பேன் என்று தான் கையில் கத்தியோடு இருக்கிறாள். நம்ம ஆளுங்க இந்த கத்தியை பார்த்து இது ஞானகத்தி என்று சொல்லிவிட்டார்கள். ஞானம் என்பது கோடியில் ஒருவனுக்கு வந்தாலே மிகப்பெரிய விசயமாக தான் அது இருக்கும்.  ஒவ்வொரு கடவுளும் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் தன் பக்தனை காப்பாற்ற நான் வைத்திருக்கிறேன் என்ற அர்த்தத்துடன் தான் இருக்கிறது. 

இயேசுநாதர் சொல்லிருப்பார் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னோரு கன்னத்தை திருப்பிகாட்டு என்பார். இது எப்பொழுது சொல்லிருப்பார் என்றால் அவர் உயர்ந்த ஞானத்தில் இருக்கும்பொழுது இந்த வார்த்தையை சொல்லிருப்பார். ஒரு சாதாரண மனிதனுக்கும் ஆன்மீகத்தில் உச்சத்தில் இருப்பவனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

சாதாரணமாக இருப்பவன் ஆன்மீகத்தில் உச்சத்தில் இருப்பவனின் வார்த்தையை எடுத்துக்கொள்ளமுடியாது. எடு்த்துக்கொண்டால் என்ன பிரச்சினை வரும் என்று கீழே சொல்லுகிறேன்.  இயேசு சொன்ன வார்த்தையை நம்ம ஆளுங்க எடுத்துக்கொண்டு இவர்களை யார் தாக்கினாலும் இயேசு சொல்லிருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும் அதனால் நான் அடிப்பவனை எதிர்காமல் மறுகன்னத்தை காட்டுகிறேன் என்பான். இங்கு உள்ள ஞானிகள் சொன்ன கருத்து இவன் காதுக்கு கேட்காது. அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு நம்ம ஆளுங்க சொன்ன கருத்தை விட்டுவிட்டார்கள் நம்ம ஆளுங்க கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். 

அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்க்கு ஒரு நாட்டையை அழிக்கவேண்டும் என்று முடிவு எடுத்து அழிக்கிறான் அமெரிக்கா காரன். அவன் இயேசு சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவில்லையே. அவன் நமது ராமனோடு கருத்தை எடுத்துக்கொண்டு செயல் புரிந்தான். ராமனோடு மனைவியை ஒருவன் கடத்திக்கொண்டு சென்றதால் ஒரு நாட்டையை அழித்தான் ராமன். அதனை எடுத்துக்கொண்டு அமெரிக்காகாரன் செயல்பட்டான். நம்ம ஆளுங்க இயேசுவோடு கருத்தை எடுத்துக்கொண்டு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். 

இந்த பதிவுக்கு வருபவர்கள் அனைவரும் மிகப்பெரிய பெரியவர்களும் ஆன்மீகவாதிகளும்,பெண்களும் வருகிறீர்கள் இடையில் இப்படி கீழ்தரமானவர்களும் வருகிறார்கள் அவர்களுக்கு புரியும் படி பதிலை கீழே தருகிறேன் நீங்கள் படிக்க வேண்டாம். 

உங்களின் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுக்கும்பொழுது அவனை நீங்கள் அடிப்பீர்களா அல்லது அவன் செய்கின்ற செயல் தீயவை அந்த கர்மத்தை அவன் அனுபவிப்பான் என்று ஏண்டா ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கிறாய் இன்னோரு கையும் நீங்களே பிடித்து அனுப்பிவீர்களா?   

உயர்ந்த ஞானியோடு கருத்தை எடுத்துக்கொண்டு இல்லறத்தில் வாழ்பவன் வாழமுடியாது. அவதார புருஷனாக வந்து வாழ்ந்து காட்டிய மகான்கள் பாரததேசத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை நோக்கினால் தெய்வம் நின்று கொல்லும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. என்னுடைய பொண்டாட்டியை ஒருவன் கடத்தினான் என்பதற்க்காக ஒரு நாட்டையை அழித்தான் பாரு ராமன் அவனை பற்றி எனது மக்கள் சொல்லிக்கொடுக்க தான் நான் பதிவை எழுதிகிறேனே தவிர உங்களை போல் ஆளுங்களுங்கு பதிவு எழுதவில்லை நண்பரே. நீங்கள் சொல்லும் கருத்தை என் மக்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவன் அவன் தன் மனைவியை தெருவில் விட்டு தான் நிற்கமுடியும்.

உன் கையை ஒருவன் வெட்டினால் அவனின் கையை நீ வெட்டு அல்லது கடவுளாக நான் வந்து வெட்டுவேன் என்று தான் மதத்தில் சொல்லிருக்கிறார்கள் ஒழிய. ஒரு கையை வெட்டினால் இன்னோரு கையையும் வெட்டுங்கள் என்று திரும்பி நிற்க சொல்லவில்லை. ஞானிகளின் வாழ்க்கை வேறு சாதாரணமானவர்களின் வாழ்க்கை வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

Unknown said...

unmaiyana.

Unknown said...

veri good

KJ said...

Sariyana pathil sir.very Nice.