Followers

Thursday, June 6, 2013

அம்மனுக்கு பூஜை


வணக்கம் நண்பர்களே!
                     நமது அம்மன் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி எனது ஊரில் கோவில் கொண்டு இருக்கிறது. அந்த அம்மனின் சக்தியால் தான் தன்னை நாடிவருபவர்களை காப்பாற்ற முடிகிறது. 

நமது பிளாக்கின் மூலம் பழக்கமான நண்பர் திரு சுகி அவர்கள் நேற்று எனக்கு அதிகமான ஒரு தொகையை அனுப்பினார் அம்மனுக்கு பூஜை செய்வதற்க்காக அனுப்பி உள்ளார். அவர் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறார். அவரின் கம்பெனிக்கு நான் வியாபார ஆன்மீக ஆலோசனை வழங்கிவருகிறேன். இந்த பிளாக்கின் வழியாக முதன் முதலாக அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று பணத்தை முதலில் அனுப்பியது இவர் தான். என்னுடைய நேரிடையான வாடிக்கையாளர்கள் பூஜைக்கு என்று பணம் அனுப்புவார்கள் ஆனால் ஜாதக கதம்பம் வழியாக முதன் முதலில் அனுப்பியது இவர் தான் முதன்மையானவர்.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு உகந்த நாள் என்று பார்த்தால் அமாவாசை. அன்றைய நாள் அங்கு வேறு ஒருவர் மூலம் அங்கு பூஜை நடைபெறுவதால் வரும் அமாவாசை அன்று நடத்தமுடியவில்லை. பிறகு ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நாளில் பூஜை நடத்தப்படும்.  வரும் மாதங்களில் இருந்து ஒவ்வொரு அமாவாசையும் ஜாதக கதம்பம் மூலம் அங்கு பூஜை செய்யப்படும்.

பூஜையில் முக்கியமாக ஹோமம் தீபாராதனை மற்றும் அன்னதானம் அங்கு செய்யப்படும். நான் ஆன்மீகம் சம்பந்தமாக பூஜை செய்வதற்க்கு பணத்தை பிறரிடம் இருந்து வாங்ககூடாது என்று இருந்தேன். பல நண்பர்கள் உங்களின் செலவில் செய்தால் உங்களுக்கு மட்டுமே அந்த புண்ணியம் சேரும் எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்க்கு இணங்க இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 

பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம். ஒவ்வொரு பூஜையும் செய்ய ஒவ்வொரு கம்பெனிகளே முன்வருகிறது.  கம்பெனிகள் பூஜைக்கு பணத்தை தருவதால் அவர்களின் கம்பெனி வளர்ச்சியை காணும் உங்களின் வளர்ச்சிக்கும் அம்மனின் அருள் வேண்டும் அல்லவா. 

ஜாதக கதம்பத்தில் பூஜைக்கு பணம் கேட்கிறார்கள் அதனால் இருக்கின்ற பணத்தை போடவேண்டும் என்று பணத்தை உடனே போடாமல் ஜாதக கதம்பத்தின் வழியாக யார் நல்லதை அடைந்தார்களோ அவர்கள் பணத்தை எனது வங்கி கணக்கிற்க்கு அனுப்பிவிட்டு எனக்கு தகவலை சொல்லுங்கள். பல பேர் அம்மனின் சக்தியால் நல்லதை அடைந்திருக்கிறார்கள். இன்னமும் அடையபோகிறார்கள். பல பேர் அம்மனின் வழியாக ஆன்மீக முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அவர்களும் இதில் பங்குக்கொள்ளலாம்.

அம்மனுக்கு பூஜை செய்வதால் அதிகமான சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களின் பிரச்சினையை அம்மனிடம் முன்வைக்கலாம். அம்மன் கண்டிப்பாக உங்களுக்கு அந்த பிரச்சினையை தீர்த்துவைப்பாள்.

கூடிய விரைவில் பூஜை செய்யும் நாள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 
9551155800.

1 comment:

Anonymous said...

http://ganesapandian.blogspot.in/2012/09/blog-post_3979.html