Followers

Tuesday, June 25, 2013

அழகே ஆபத்து


வணக்கம் நண்பர்களே !
                    மரணம் வருவதற்க்கு முன்பு எப்படி எல்லாம் அறிகுறி தென்படும் என்பதை உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு சில விசயங்களை பழைய பதிவுகளில் எழுதியதாக ஒரு ஞாபகம் இருக்கிறது தேடி படித்துப்பாருங்கள். அதில் முக்கியமான ஒரு சில விசயங்களை இப்பதிவின் வழியாக நாம் பார்க்கலாம்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஒரு சில நடவடிக்கை வழியாக நாம் நன்றாக இவர் சீக்கிரம் போய்விடுவார் என்று தெரியும். நோய்வாய்ப்படுபவர் ஆணாக இருந்தால் அவரின் மனைவி மிக அழகாக மாறிவிடுவார். அப்பொழுது நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது தான் கூடிய விரைவில் இவர் போய்விடுவார். நான் பல பேரை பார்த்திருக்கிறேன். அவர்களின் மனைவி மிக அழகாக அந்த நேரத்தில் இருப்பார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. இதனை நீங்களும் கவனித்து பாருங்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்கும்.

இப்பொழுது பிறந்த நாட்கள் எல்லாம் படுபந்தாவாக பல இடங்களில் கொண்டாப்படுகிறது. இப்பொழுது ஒரு வயது குழந்தைக்கே பிளக்ஸ் போர்ட் எல்லாம் வைத்து அரசியல்வாதி அளவுக்கு படு ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. சரி ஏதோ ஒரு நாள் மகிழ்ச்சி நடத்தப்பட்டும். ஒரு மனிதனுக்கு மரணம் வரும் நாள் அதிகபட்சமாக அவனின் பிறந்த நாள் அன்று தான் வரும். அவனின் பிறந்த மாதத்தில் அதாவது தமிழ் மாதத்தில் கண்டிப்பாக போய் சேர்ந்துவிடுவான். 

ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளும் இறப்பார்கள். நான் பலபேர்களை இப்படி பார்த்திருக்கிறேன்.மாரகதசா நடைபெற்ற கொண்டு இருக்கும்பொழுது அவர்களின்  பிறந்த நாளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த தகவல் எல்லாம் எனக்கு எனது தாயார் சொல்லிக்கொடுத்தார்கள் அதனை நான் அனுபவத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.

நாம் சோதிடத்தை கற்பது புத்தகத்தில் இருந்தாலும் அனுபவத்தில் கற்பது என்பது அதிகம். அனுபவ சோதிடம் நிறைய கைகொடுக்கும். நீங்கள் அனுபவத்தில் பல விசயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: