Followers

Friday, June 14, 2013

நாபியோகம்


வணக்கம் நண்பர்களே!
                    யோக வரிசையில் இப்பதிவில் ஒரு யோகத்தை நாம் பார்க்கலாம். இந்த யோகத்தின் பெயர் நாபியோகம்.

நாபியோகத்திற்க்கு எப்படிபட்ட கிரகநிலைகள் அமையவேண்டும்?

ஜென்ம லக்கினம் கடகமாக இருந்து செவ்வாயும் குருவும் சேர்ந்து மேஷத்தில் அமர்ந்தால் இந்த யோகம் ஏற்படும். அதைப்போல் கடக லக்கினத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்து அமர்ந்தாலும் இந்த யோகம் ஏற்படும். 

1, 6, 7, 8 ஆகிய இந்த நான்கு வீட்டில் தீமையை விளைவிக்கும் பாவகிரங்கள் சேராமல் சுபக்கிரகங்கள் சேர்ந்து இடைவிடாது இருக்குமானாலும் இந்த யோகம் உண்டாகும். 

என்ன பலனை ஜாதகர் அனுபவிப்பார்?

ஜாதகர் நீண்ட ஆயுளை பெற்று ஏராளமான சொத்து மக்கள் பலம் அரசாட்சி பெற்று சந்தோஷமாய் வாழ்வார்.  

ஒரு சிலருக்கு அமைச்சராகவும், ராணவத்தில் படைத்தளபதியாகவும் இருப்பார்கள். இளம்வயதில் அதிக செல்வத்தைச் சம்பாதித்து சுகத்தோடு இருப்பர்.

யோகம் செயல்பட ஒரு சிலருக்கு அந்த தசா வரும் என்று பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. பிறந்ததில் இருந்து இந்த யோகத்தால் நல்ல பலனை அனுபவிப்பார்கள். ஒவ்வொரு ஜாதகம் ஒவ்வொரு மாதிரி செயல்படும். அனைத்தையும் நாம் ஆராய்ந்து தான் பலனை சொல்லவேண்டும்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: