Followers

Tuesday, June 18, 2013

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் நான் சொன்ன ஒரு சில கோவில்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு அந்த கோவிலுக்கு சென்று வருகிறார்கள். நல்லது.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியைப்பற்றி நான் இது வரை பதிவுகளில் எழுதவில்லை. நமது பதிவில் இருக்கும் போட்டு அந்த அம்மனின் படம் தான். மிகப்பெரிய சக்திவாய்ந்த அம்மன். திருவக்கரை அம்மன் அனல்மின்நிலையம் என்றால் மேல்மலையனூர் அம்மன் அணுமின்நிலையம் போன்ற சக்தி உடையது. இது பல பேர்க்கு இந்த செய்தி தெரிந்த ஒன்று தான். நாமும் சொல்லிவிடவேண்டும் அல்லவா. அதனால் இதனைப்பற்றி சொல்லுகிறேன்.

என்னுடைய குருநாதர் அமைவதற்க்கு முன்பிருந்து நான் அந்த ஊருக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தேன். அனைவரையும் அரவணைக்கும் அன்னை அவள். அவளின் புகழைப்பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை அது உலகம் பூராவும் தெரியும் அல்லவா.

எனது ஊரில் இருக்கும் அம்மனும் இது தான். மேல்மலையனூரில் இருக்கும் அதே சக்தி அங்கே வெளிப்படுகிறது. அதனை வைத்துதான் உங்களுக்கு நல்லது செய்ய என்னால் முடிகிறது. 

நீங்கள் மேல்மலையனூரில் உள்ள அம்மனையும் சென்று வணங்கிவாருங்கள். இப்பொழுது அனைவரும் வேண்டுதல் வைத்திருக்கிறீர்கள் அந்த வேண்டுதல் நடந்து முடிந்த பிறகு நமது அம்மனை சென்று வணங்கி வரலாம்.

மேல்மலையனூர் செல்வது காலையில் சென்று வணங்கி வாருங்கள். மாலையில் சென்றால் அந்த ஊரில் இருந்து திரும்பிவருவதற்க்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். பஸ் வசதியும் குறைவாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: