Followers

Wednesday, June 19, 2013

அம்மனுக்கு பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நாளை நமது அம்மனுக்கு பூஜை செய்யபடுகிறது. அனைத்து செலவுகளும் நமது ஜாதக கதம்பத்தின் நண்பர்களால் நடத்தப்படுகிறது. ஜாதககதம்பத்தின் வியாபார ஆலோசனை என்று ஆரம்பித்தவுடன் அதில் இணைந்த நண்பர்கள் தாராளமாக பணஉதவி நமது அம்மனின் பூஜைக்கு கொடுத்தார்கள். 

அள்ளி தருபவள் அன்னை அல்லவா. அவர்களுக்கு நல்லது நடந்ததால் அள்ளி தருகிறார்கள் மற்றும் நமது பிளாக்கிற்க்கு வரும் நண்பர்களும் அளித்துள்ளார்கள். பல நண்பர்கள் என்னிடம் சொல்லியுள்ளார்கள் மாதம் மாதமும் பணம் அனுப்புகிறேன் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிதாக நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதை நமது அன்னை தந்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் எப்படி நான் எங்கேயே உட்கார்ந்துக்கொண்டு இருப்பவனை தேடிவருவார்கள். அனைத்திற்க்கும் அன்னையின் அருள் மட்டுமே. 

நாளை பூஜை செய்வதால் உங்களின் வேண்டுதல்களை நாளை அம்மனிடம் வைக்கலாம். நாளை அம்மனை நினைப்பதும் நல்லது. முடிந்தால் என்னோடு நாளை போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள். அடுத்த மாத பூஜைக்குள் நமது அம்மன் உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொடுப்பாள்.

வழக்கம்போல் நாளை பதிவை தந்துவிடுகிறேன். இன்று தயார் செய்துவைத்துவிட்டேன். நாளை அங்கு இருக்கும் இண்டர்நெட் மையத்தில் இருந்து பதிவை தந்துவிடுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: