Followers

Sunday, June 2, 2013

கேள்வி & பதில்

வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரம் செய்யும் நண்பர்களுக்காக என்று ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு பல பேர் வந்து ஆலோசனை பெற்று இணைந்துள்ளார்கள், மகிழ்ச்சியான ஒரு விசயமாக தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு நண்பர் கேட்டுருந்தார். உலகத்தில் உளள பணக்காரர்கள் எல்லாம் உங்களை போல் ஆள்களை வைத்து தான் பணக்காரர்களாக ஆகிறார்களா என்றும் கேட்டார் அதே நேரத்தில் மிகப்பெரிய பெயர் லிஸ்ட்டும்  கொடுத்திருந்திருந்தார். லாபத்தில் பங்கு கேட்கும் நீங்கள் நஷ்டத்தில் பங்கு தருவீர்களா என்றும் கேட்ருந்தார்.

மிகப்பெரிய அறிவியல் தளமான நாசாவிற்க்கு ஆலோசனை தருவதற்க்கு கேரளாவில் இருந்து சோதிட ஆட்கள் செல்லுகிறார்கள். இதனை கேரளாவில் உள்ள தொலைக்காட்சிகளில் இதனை காண்பித்தார்கள். நாசாவிற்க்கே இங்கே இருந்து ஆட்கள் செல்லும்பொழுது நீ்ங்கள் கொடுத்த பணக்காரர்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்களா என்ன? . அனைத்து பணக்காரர்களும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் ஆனால் உள்ளுக்குள் மிகப்பெரிய வேலைகள் எல்லாம் நடத்திக்கொள்வார்கள். இதனை நீ்ங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன் அவ்வளவு தான். 

லாபத்தில் பங்கு கேட்கும் நீங்கள் நஷ்டத்தில் பங்குக்கொள்வீர்களா என்று கேட்டார். நான் எடுககும் கம்பெனிகள் கண்டிப்பாக நஷ்டத்தில் விழவைப்பதில்லை. இப்பொழுது எடுத்த முக்கால்வாசி கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்கியவை தான். அதனை எடுத்து தான் லாபத்தில் இயங்கவைக்கிறேன். நஷ்டம் அடைந்தால் நான் எதற்கு அவர்களுக்கு வழி சொல்லவேண்டும். அவர்களே நடத்திக்கொள்வார்களே.

இந்த தளத்தில் இருந்து தொழில் செய்ய ஆலோசனை கேட்ட வந்த யாரிடமும் இன்றைய வரை நான் இன்னும் பணத்தை வாங்கவில்லை. பல நண்பர்கள் பணத்தை எனக்கு கொடுத்தார்கள்  நான் வாங்கிக்கொள்ளவில்லை நீங்கள் இன்னமும் பெரிய அளவில் வாருங்கள் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தான் சொல்லியுள்ளேன். எனக்கு பணம் தேவைப்படுகிறது நான் கற்ற வித்தையை செயல்படுத்துகிறேன். இதனை நான் வெளியில் சொல்லாமல் செயல்படுத்த முடியும் ஆனால் இதனை படிக்க வரும் நண்பர்கள் இது எப்படி இவனால் மட்டும் இப்படி சம்பாதிக்கமுடிகிறது என்று நினைப்பார்கள் அவர்களும் இந்த வழியை கற்றுக்கொள்ள நினைத்து தேடுவார்கள். 

ஒரு அலுவலகத்தில் அடிமாடாக வேலை செய்வதை விட இந்த வழி சிறந்த வழி. இந்து மதத்தில் உள்ள ஆன்மீகவிசயங்களை பயன்படுத்தினாலே இந்தியாவில் உள்ள அனைவரும் பணக்காரர்களாக மாறிவிடுவார்கள். பயன்படுத்த தெரியவேண்டும். ஆன்மீகத்தில் உள்ளவற்றை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

rs said...

Will this Aanmegam helpful for even Working professional or only businessmen. Pl clear me.

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே ஆன்மீகம் இதற்க்கு மட்டும் தான் என்று இல்லை. அனைத்திற்க்கும் ஆன்மீகம் உதவும். தனி நபரின் வேலைக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் காயத்ரி மந்திரத்தை பயிற்சி செய்யுங்கள்