Followers

Monday, June 17, 2013

நாளை வேண்டாம் இன்றே செய்வீர்


வணக்கம் நண்பர்களே !
                    வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு உதவியை பல பதிவுகளில் தந்திருந்தேன். வியாபாரம் செய்யும் நண்பர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். நான் எதிர்பார்த்தை விட நிறைய நண்பர்கள் வந்தனர் நல்லது ஆனால் இன்னமும் நிறைய பேர்கள் தயங்கி உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது. 

இதனை ஆரம்பித்தன் நோக்கம் வடநாட்டில் இருந்து இங்கு வந்து பயன்படுத்தி ஒரு மக்கள் முன்னேற்றம் காணும் பொழுது நம்ம ஆட்கள் ஏன் முன்னேற்றம் அடையகூடாது என்ற நல்ல நோக்கத்தில் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. நீங்கள் தயங்காமல் உங்களின் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள இது உதவும். 

நான் பல பேர்களின் வீடுகளுக்கு நான் சென்று வருகிறேன். அப்படி சென்று வரும்பொழுது உங்களின் வீடுகளில் நான் வந்து சென்றதால் உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கண்டிப்பாக வரும் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் அடையவேண்டும். உங்களின் உழைப்பை அந்த தொழிலில் முழுமையாக செலுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு. பல பேர் இப்படி ஜாதககதம்பம் வழியாக பயன்பெறுகிறார்கள். 

வியாபாரத்தில் படிப்படியாக தான் வளர்ச்சியை தருகிறேன். படிப்படியாக நான் வளர்ச்சியை கொடுத்தாலும் உங்களின் கனவு கோடியை கொட்டவேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக உங்களின் கனவை நமது அம்மன் நிறைவேற்றிக்கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்பொழுது நிலவரப்படி பல கம்பெனிகள் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனின் வளர்ச்சியில் தான் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். நமது அம்மனுக்கு கம்பெனிகளே பூஜையை செய்ய செலவை ஏற்றுக்கொள்ளும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும்.  தனி நபர்களும் பூஜை செலவுக்கு பணத்தை அனுப்பியுள்ளார்கள். 

உங்களின் வேண்டுதலை தாராளமாக அம்மனிடம் வைக்கலாம். அம்மன் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். நிறைவேற்றினால் பணம் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்களே வேண்டிக்கொள்ளுஙகள். அனைவருக்கும் பொதுவான ஒரு சக்தி தான் நீங்கள் கேட்டால் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். 

எனக்கு பணம் அனுப்பியவர்கள் அவர்களுக்கு நடந்ததால் அவர்களின் விருப்பம்படி அவர்களின் அன்னைக்கு அனுப்பியுள்ளார்கள். ஒரு நன்றியை காட்டுவதற்க்காக செய்கிறார்களே தவிர வேறும் ஒன்றும் கிடையாது. உங்களின் வேண்டுதல் நாளை என்று தள்ளிப்போடாமல் இன்றே வைத்துவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: