Followers

Tuesday, June 11, 2013

அடிப்படை தகவல்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நான் பல நண்பர்களின் வீடுகளுக்கு ஆன்மீக விசயமாக செல்லுகிறேன். அப்பொழுது அவர்களின் வீட்டை அந்த நண்பர்கள் சுற்றி காட்டுவார்கள். அவர்களுக்கு தேவைப்பட்ட அறிவுரை வழங்கிவிட்டு வருகிறேன்.

உங்களின் வீட்டில் நல்ல சக்தி இருக்கிறதா அல்லது தீயசக்தியின் ஆதிக்கத்தில் இருக்கிறதா என்பதை உங்களின் வீட்டிற்க்கு நான் வரும்பொழுது எனக்கு தெரிந்துவிடும். இன்று பல பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். இவர்கள் குடியிருப்பதற்க்கு முன்பு பல பேர் அந்த வீட்டில் குடி இருந்திருக்கலாம் அவர்களின் நடவடிக்கை எப்படிபட்டது என்பதை நாம் அறிந்திருக்கமுடியாது. 

ஒரு சில வீட்டில் தற்கொலை கூட செய்திருக்கலாம். அப்படிபட்ட வீட்டில் நீங்கள் குடியிருந்தால் உங்களுக்கு பிரச்சினை வரும். தேவை இல்லாமல் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்.  குடும்பத்தில் அமைதி குறைவாக இருக்கும். தேவையற்ற கனவுகள் வந்து தொந்தரவு செய்யும்.அப்படிபட்ட வீடுகளில் நீங்கள் குடியிருந்தால் நீங்கள் அந்த வீட்டைவிட்டு அடுத்த வீட்டை பார்த்து குடி செல்லலாம் அப்படி இல்லை என்றால் ஆன்மீகவாதிகளை வைத்து அங்கு பூஜை செய்யலாம்.

பல வீடுகளில் மாற்று மதத்தினரின் கடவுளின் போட்டோவை பூஜையறையில் வைத்திருக்கிறார்கள். மாற்றுமதத்தினர் கடவுளின் போட்டோவை உங்களின் வீடுகளில் வைத்துக்கொள்ளாதீர்கள். மாற்றுமதனரின் வழிபாட்டுக்குள்ள பொருள்களை வீட்டில் வைத்தால் ராகு பலம்பெற்றுவிடும். ராகு பலம்பெறும்பொழுது உங்களின் வீடுகளில் உள்ள பெண்கள் ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்படும். உங்களின் வீட்டில் வயதிற்க்கு வந்த பெண்கள் இருந்தாலும் அவர்களும் வழிதவறி போக வாய்ப்பு உள்ளது.

உங்களின் பூஜையறையில் விக்கிரகவழிபாடு இருக்ககூடாது. விக்கிரங்களை வீட்டில் வைப்பது தவறான ஒன்று அதனை தவிர்க்க பாருங்கள். காலையில் குளித்துமுடித்துவிட்டு உங்களின் பூஜையறையில் விளக்கை ஏற்றி வணங்கிவிட்டு அடுத்த வேலையை தொடங்குங்கள். பல ஒழுங்கான வழிமுறைகளை பின்பற்றும்பொழுது நீங்கள் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

raagavans said...

மாற்று மதம் என்னும்போது கணவன் இந்துவாகவும் துணைவி கிறிஸ்டியன் ஆகவும் இருந்தால் எவ்வாறு செய்வது ?