Followers

Monday, June 3, 2013

சந்திரனின் நிலை: உதாரண ஜாதகம்


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகரின் லக்கினம் விருச்சிகம். லக்கினாதிபதி உச்சம் பெற்று இருக்கிறார். மூன்றாவது வீட்டில் போய் அமர்ந்தாலும் உச்சம் பெற்றுவிடுகிறார். லக்கினாதிபதி பலம் பெற்றவிடுகிறார். மூன்றாவது வீட்டில் செவ்வாய் அமர்வது நல்ல தைரியத்துடன் விளங்குவார்.

குருவின் நிலையை கவனியுங்கள். குரு சூரியனோடு சேர்ந்து செல்லுகிறது. இரண்டும் ஒரே நட்சத்திரத்தில் செல்லுகிறது. சூரியனோடு சேரும் கிரகம் அஸ்தங்கம் அடையும் அல்லவா. அப்படி பார்க்கும் பொழுது குரு கிரகம் அஸ்தங்கம் அடைந்திருக்கிறது. குரு கிரகம் சூரியோனோடு அஸ்தங்கம் அடைய 11 பாகைக்குள் இருந்தால் அஸ்தங்கம் அடையும். குரு வேலை செய்யாது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரளவு வேலை செய்யும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்தபடியாக சனிக்கிரகம் எட்டில் போய் அமர்ந்திருக்கிறார். சனிக்கிரகம் எட்டில் அமர்ந்துவிட்டது ஒன்றும் நடைபெறாது என்று பார்த்தால் இந்த ஜாதகர் அனைத்திலும் வெற்றிபெற்று ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கிறார். ராஜகிரகம் குருவும் சனியும் அடிப்பட்டுக் கூட நல்ல முறையில் வாழ்க்கிறார் என்றால் எப்படி என்று நினைக்க தோன்றும்.  

இவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு என்று சொல்லக்கூடிய சுகஸ்தானத்தின் அதிபதி சனி பரிவர்த்தனையில் இருக்கிறார். எட்டாம் வீட்டு அதிபதியாகிய புதன் நான்காவது வீட்டில் அமர்கிறார். இது ஒரு நல்ல அமைப்பு. இவரின் முன்னோர்களின் சொத்து பல கோடி இவருககு கிடைத்தது. அது ஒரு வீடாக இருந்தது இவருக்கு கிடைத்தது. மிகப்பெரிய நகரத்தில் முக்கியமான இடத்தில் உள்ள வீடு கிடைத்து. இவரின் அப்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் அந்த வீட்டை பிறர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார் அதனால் வழக்கு தொடர்ந்து இருந்தார். இவருக்கு வெற்றி பெற்று சொத்து வந்துவிட்டது.

லக்கினாதிபதியின் நிலையை பார்த்தால் உச்சம். செவ்வாய் உச்சம் பெற்றால் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை அனைத்தும் கிடைத்துவிடும்.அதுவும் நிலம் தேடிவரும்.அதேபோல் தேடி வந்துவிட்டது. நீங்கள் அடுத்ததை ஒன்றை கவனியுங்கள் குரு அஸ்தம் பெற்றாலும் இவருக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறது. ஆண்குழந்தை இருக்கிறது. 

செவ்வாய் நன்றாக இருந்தாலும் ஆண்குழந்தைக்கு வாய்ப்பு அதிகம். சூரியன் ஐந்தில் இருப்பதும் ஆண்குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் ஐந்தில் இருப்பது ஒரு சிலருக்கு பிரச்சினை தரும் ஆனால இவருக்கு பிரச்சினை ஏற்படவில்லை. 

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது இவரி்ன் ராசியை பாருங்கள். கடக ராசி. சந்திரன் நிலையை நாம் கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்று. சந்திரனின் நிலையை எப்படி கவனிப்பது என்றால் முதலில் அவர் வளர்பிறையில் பிறந்தவரா அல்லது தேய்பிறையில் பிறந்தவரா என்று பார்க்க வேண்டும். இவர் வளர்பிறையில் பிறந்து இருக்கிறார். படிப்படியாக வளர்ச்சியை நோக்கி தான் செல்வாரே தவிர இறங்கு முகம் கிடையாது.

அடுத்த உதாரண ஜாதகத்தில் வேறு ஒரு தகவலை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

Unknown said...

HELLO SIR,

for vrichuha lagnam channthiran is in pathaga sthanam .wat is ur comment regarding this?

Unknown said...

hello sir
How about chanthiran in pathga sthanam fr vritchiga lagnam

rajeshsubbu said...

வணக்கம் Rajeswari அனைத்தையும் நாம் பதிவுகளிலேயே பார்க்கலாம்.