Followers

Saturday, June 1, 2013

கிரக மண்டலம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர் ஒருவர் கேட்டுருந்தார். பரிகாரம் செய்யும் பொழுது ஒவ்வொரு கிரகத்தையும் சாந்தபடுத்த பல வழிகள் சொல்லியுள்ளார்கள் ஏதாவது புதுமையான வழி இருக்கிறதா என்று கேட்டுருந்தார் அவரின் விருப்பத்திற்க்காக ஒரு வழியை சொல்லுகிறேன்.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு மண்டலத்தில் இருக்கிறது அந்தந்த மண்டலத்திற்க்கு என்று ஒரு தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தெய்வத்தை வைத்து நீங்கள் சாந்தப்படுத்தலாம். குரு மண்டலம் மற்றும் சுக்கிரன் மண்டலம் இது பிரம்ம தேவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரம்மாவை நீங்கள் சாந்தப்படுத்த தெரிந்தால் இரண்டு கிரகங்களையும் சாந்தப்படுத்தமுடியும்.

சந்திர மண்டலம் மற்றும் புதன் மண்டலம் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சூரிய மண்டலம் மற்றும் செவ்வாய் மண்டலம் சிவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சனி,ராகு,கேது அந்நிய தேவதையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கிரகங்களை இவர்கள் கொண்டு ஆளமுடியும். அதே போல் அந்தந்த கிரகத்திற்க்கும் நாம் செல்லமுடியும். அதற்கு அந்த அதிதேவதையை வைத்துக்கொண்டு நீங்கள் செயல்படுத்தும் பொழுது இது சாத்தியப்படும்.

நீங்கள் அங்கு செல்லமுடியும் என்பது உங்களின் ஆத்மாவால் செல்லமுடியும்.ஆத்மா வைத்து செய்கின்ற காரியம் இது. இது எல்லாம் ஆன்மீகத்தில் உச்ச நிலையில் இருப்பவர்கள் மட்டுமே முடிகின்ற செயல். யாருக்காவது பயன்படும் என்ற நோக்கத்தி்ல் இதனை சொன்னேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

KJ said...

Thanks sir.. Saturn ragu kethu , Anniya devadai endru neengal kuripiduvathu yentha kadavulai.?