Followers

Saturday, June 22, 2013

சந்தித்த வேளையில்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு நாட்களும் வேலை அதிகமாக இருந்ததால் பதிவை வலையேற்ற முடியவில்லை. இன்று சென்னை திரும்பியபிறகு தான் வலையேற்றினேன். இரண்டு நாட்கள் பதிவு வரவில்லை என்றவுடன் என்னை தொடர்புக்கொண்டு பல நண்பர்கள் ஏன் பதிவு எழுதவில்லை என்றே கேட்டுவிட்டார்கள். கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

நேற்று இரவு 7 மணிக்கு என்னை சந்திக்க தஞசாவூர் ரயில் நிலையத்திற்க்கு கும்பகோணத்தில் இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். இருவர் மட்டும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான்கு நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரும் நமது பிளாக்கில் மூலம் அறிமுகமானவர்கள். மிக சந்தோசமாக இருந்தது ஏன் என்றால் அந்த பகுதியில் எனக்கு அந்தளவுக்கு வாடிக்கையாளர்கள் கிடையாது.  முதல் சந்திப்பிலேயே நான்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்களே என்று சந்தோஷபட்டேன். 

எனது ஊரான தஞ்சாவூர் பகுதியில் எனக்கு அந்தளவு பழக்கம் கிடையாது. ஆன்மீகவழியில் கிடையாது. இப்பொழுது தான் அந்த பகுதியில் இருந்து வருகிறார்கள். இது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. என்னடா நாமா இவ்வளவு கற்று நமது பகுதியில் இருந்து யாரும் தேடிவந்து இதனை கற்றுக்கொள்ளவில்லையே என்று நான் நினைத்து அந்த பகுதியில் இருந்து வந்த முதல் பழக்கமான நண்பர் ஒரத்தநாடு செந்தில்குமாரிடம் ஒரு வாரத்திற்க்கு முன்பு சொல்லிக்கொண்டு இருந்தேன். பாருங்கள் ஒரு வாரத்தில் அந்த பகுதியில் இருந்து நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள்.

இரவு மணி 7 முதல் 10 வரை அனைவரும் தஞ்சாவூர ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்கவந்திருந்தார் நான் புது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்ததால் அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வழி தவறிவிடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அப்படி இல்லை. என்னை சந்திக்க வரும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் தான் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டால் அனைவரும் மிகப்பெரிய அளவில் உருவாகிவிடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. 

இப்பொழுது ஆன்மீகவாதிகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க தயார் என்றால் பல விவேகானந்தர்களை உருவாக்கலாம். நம் மதத்தின் உள்ள கருத்துக்கள் மீது அப்படி ஒரு ஈடுபாட்டோடு அனைவரும் இருக்கிறார்கள். அனைவரும் என்னிடம் பேசிவிட்டு உங்களை கேள்வி கேட்டு தொந்தரவு செய்கிறோம் என்று நினைக்கிறோம் என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனது வேலையை இது தானே என்றும் சொன்னேன். மனதிற்க்குள் அவர்களுக்காக பிரத்தனை செய்துவிட்டு அனைவரும் சென்று சாப்பிட்டுவிட்டு 10° 45 மணிக்கு மன்னார்குடி சென்னை எக்ஸ்பிரஸ்லில் ஏறினேன். அவர்களும் கும்பகோணம் வரை வந்தார்கள்.

அடுத்தமுறை செல்லும்பொழுது எனது ஊருக்கு செல்லும்பொழுது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உள்ளேன்.நண்பர்களே என்னை சந்திக்கும்பொழுது வெளியிடங்களில் நண்பர்கள் போல் சந்திக்கலாம். உங்களுக்கு ஏதாவது நடக்கவேண்டும் என்று நினைத்தால் என்னை உங்களின் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள். ஏன் என்றால் பல சந்நியாசிகளை சந்தித்தியுள்ளேன். அவர்களின் புண்ணியம் உங்களின் வீடுகளில் தங்குவதற்க்கு நல்ல வாய்ப்பும் இருக்கிறது.நமது குரு கொடுத்த விசயங்கள் என்னிடம் இருக்கிறது அதன் வழியாக நீங்கள் வளர்ச்சியை காணமுடியும் என்பதால் இப்படி சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: