Followers

Saturday, December 14, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பி இருந்தார். பல நாட்களுக்கு முன்பு அவரின் சோதிடத்தை அனுப்பி இருந்தேன் எனக்கு பதில் வரவில்லை என்று சொல்லிருந்தார்.

பொதுவாக என்னிடம் சோதிடம் பார்ப்பதற்க்கு என்று அனுப்புவர்களுக்கு சொல்லும் சேதி எக்காரணம் கொண்டும் என்னால் பதிலை டைப் செய்து அனுப்பமுடியாது என்று முதலிலேயே சொல்லிவிடுவது உண்டு. ஏன் என்றால் எனக்கு இருக்கும் நேரத்தில் பதிவு மட்டும் தான் எழுதமுடியும். ஒரு நாள்க்கு பல பதிவுகள் எழுதவேண்டும் என்று நினைப்பவன் நான். என்னால் எப்படி உங்களுக்கு பலனை டைப் செய்து அனுப்பமுடியும். 

கட்டண சோதிடத்தில் வருபவர்களுக்கே என்னால் டைப் செய்து அனுப்பமுடியவில்லை. அவர்களை போன் செய்து கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. நண்பர்களே எக்காரணம் கொண்டும் டைப் செய்து அனுப்புவார் என்று எதிர்பார்க்காதீர்கள். 

போன் செய்து கேட்டுக்கொள்ளுங்கள். போன் செய்து பேசுபவர்களுக்கே நான் உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லி நேரம் இருக்கும்பொழுது அவர்களை தொடர்புக்கொண்டு சொல்லிவிடுவது உண்டு. 

உங்களுக்கு தேவையான தகவல்களை போனில் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது. என்னால் முடிந்த தகவலை போனில் தருகிறேன். நான் வெளிநாட்டில் இருக்கின்றேன். அந்த இடத்தில் சிக்னல் இருக்கவில்லை அதனால் உங்களை தொடர்புக்கொள்ளமுடியவில்லை என்ற காரணம் எல்லாம் தேவையற்ற ஒன்று. அன்புடன் தவிர்க்கவும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: