Followers

Sunday, December 1, 2013

தினமும் செய்யவேண்டியவை


ணக்கம் ண்பர்களே!
                     காயத்ரி மந்திரம் செய்பவர்கள் உங்களின் நம்பிக்கையை உங்களின் பக்தி மீது வைக்கவேண்டும். ஒரு சிறு சந்தேகம் வந்தாலும் உங்களின் மந்திரம் வீணாக போய்விடும். எப்படி கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் செய்துக்கொண்டு வருகிறீர்கள் அப்படி வரும்பொழுது நீங்கள் ஒரு நாள் அதன் மீது சந்தேகப்பட வைக்கும் அப்படி வைக்கும் நேரத்தில் நீங்கள் உஷாராக இருந்துவிடவேண்டும்.

ஒவ்வொரு நாளும் நான் பூஜை செய்தால் மட்டுமே அந்தநாள் எனக்கு பிடித்த நாளாக அமையும். தினமும் எப்படியும் இன்று மந்திரத்தை சொல்லிவிடவேண்டும் என்று நினைப்பேன். நீங்களும் இது போல் செய்யவேண்டும்.எப்படி இன்று செய்துமுடித்துவிட்ட தான் அடுத்த வேலையை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் உங்களி்டம் வரவேண்டும்.

இன்று அம்மனை வைத்து வேலை செய்தாலும் ஆன்மீகத்திற்க்கு வந்து முதல் நாள் என்ன செய்தோனோ அதனை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.என்னிடம் அம்மன் வந்துவிட்டது என்று அந்த மந்திரத்தை உச்சரிக்காமல் இருக்கமுடியவில்லை. காரணம் நாம் தினமும் அந்த மந்திரத்தை சொல்லும்பொழுது மட்டுமே நம்மோடு அது இருக்கும். அப்படி சொல்லாமல் விட்டுவிட்டால் நாம் எப்பொழுதாவது கூப்பிட்டால் அது வராது. அலுப்புபார்க்காமல் மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.

இத்தனை நாளோடு இதனை முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு நாள் விட்டால் கூட பரவாயில்லை அடுத்த நாள் கண்டிப்பாக செய்யவேண்டும் என்று ஆரம்பித்துவிடுங்கள். நமக்கும் அதுக்கும் ஒரு இணைப்பு இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். விட்டுவிடகூடாது.

நீங்கள் மந்திரப்பயிற்சி செய்துவந்தால் தொடர்ச்சியாக செய்துவருவது நல்லது. எதனையும் தொடர்ந்து செய்துவரும்பொழுது மட்டுமே சித்தியாகும்.எங்கோ ஒருவனுக்கு நடந்து இருக்கும்பொழுது நமக்கு ஏன் நடைபெறாது என்று எண்ணம் வைத்தால் போதும் உங்களுக்கும் கண்டிப்பாக இது நடைபெறும்.உலகத்தில் உள்ள அனைவராலும் சிறந்த ஆன்மீகவாதியாக மாறமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: