Followers

Sunday, December 1, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் காயத்ரி மந்திரப்பயிற்சியை பற்றி கேள்வி எழுப்பி இருந்தார் அவருக்கு பதில் அளிக்குவிதமாக இந்த பதிவு.


கேள்வி 

வணக்கம் நான் காயத்திரி மந்திர பயிர்ச்சி பல மாதங்களாக நீங்கள் சொன்னது போல செய்தேன் ஆனால் எந்த மாற்றமும் எற்படவில்லையே ?


பதில்


காயத்ரி மந்திரம் என்பது நான் கண்டுபிடித்த ஒரு மந்திரப்பயிற்சி கிடையாது. இதனை பல ஆண்டுகள் நமது மதத்தில் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கு காயத்ரி மந்திரம் செய்து பயன் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது என்று அவர்களே சொல்லியுள்ளார்கள். ஒருவருக்கு காயத்ரி மந்திரம் சித்தி நடப்பது அவனின் கர்மாவை பொறுத்து அமையும் என்று சொல்லியுள்ளார்கள்.

உங்களின் ஆத்மா பல கர்மாக்களை சுமந்து இருக்கலாம். நீங்கள் செய்யும் காயத்ரி மந்திரம் உங்களின் கர்மாக்களை அழிப்பதற்க்காகவே வேலை செய்துக்கொண்டும் இருக்கலாம். பொறுமையாக செய்துக்கொண்டு வாருங்கள்.

பத்து நிமிடத்திலும் சித்தி நடக்கும் பத்தாயிரம் நாட்களிலும் சித்தி நடக்கும். அது அது அவனின் கர்மாவை பொருத்து அமைகின்றது. இந்த விசயத்தில் ஒரு சிறிய பயிற்சியில் உங்களை நீங்களே சோதனை செய்யுங்கள் என்று பயிற்சியின் போது சொல்லிருப்பேன். அப்பொழுதே உங்களுக்கு நீங்கள் செய்யும் பயிற்சியின் நிலை எப்படி இருக்கும் என்பதை சோதனைசெய்திருக்கமுடியும்.

நான் எந்தவிதத்திலும் உங்களின் பயிற்சியில் தலையீடு செய்வதில்லை. உங்களின் பயிற்சி உங்களுக்கு மட்டுமே. ஒரு சிலருக்கு என்ன் தான் செய்தாலும் சித்தி நடைபெறாது. அது அவர்களின் கர்மாவை தீர்ப்பதற்க்கு செலவாகிறது என்று அர்த்தம். உங்களின் ஆத்மா எப்படிப்பட்டது என்பதை நீங்களே அறிந்திருக்கமுடியும்.

இந்த பயிற்சியில் நான் அறிந்துக்கொண்ட ஒரு விசயத்தை வெளிப்படையாகவே சொல்லுகிறேன். பக்தியாக தன்னை காட்டிக்கொள்பவர்களுக்கு ஒன்றுமே நடைபெறமாட்டேன்கிறது. ஜாலியாக என்ஜாய் செய்துக்கொணடிருப்பவர்களுக்கு எளிதில் சித்தி கிடைக்கிறது. கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்கும் புரியவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: