Followers

Friday, February 8, 2013

பூர்வ புண்ணியம் 28



வணக்கம் நண்பர்களே !
                      ஒரு வழியாக ராகு பகவான் ஐந்தில் நின்றால் முன்ஜென்மத்தில் என்ன நடைபெற்று இருக்கும் என்பதை தெரிந்துக்கொண்டுவிட்டீர்கள்.

பூர்வபுண்ணியபகுதியில் சோதிடத்தை சேர்த்தவுடன் பல பேருக்கு இந்த தொடர் சென்றடைந்து பயன்பெறுகிறார்கள் என்னும்போது நான் எழுதியதற்க்கான பலனை அடைந்துவிட்டேன்.

மனிதன் கர்மம் செய்யாமல் இருக்கமுடியாது என்று அனைவருக்கும் தெரியும்.மனிதன் கர்மம் புரியதான் வந்திருக்கிறான். எழுந்திருப்பது உட்காருவது உண்பது அருந்துவது தூங்குவது விழிப்பது நினைப்பது சிந்திப்பது வேலை செய்வது கனவு காண்பது தியானம் செய்வது அமர்வது இப்படி எல்லாமே செயல்கள் தான். ஆகவே உடல் உள்ளவரை மனிதன்  தன் இயல்புக்கு ஏற்றவாறு ஏதாவது செயல் செய்துக்கொண்டு தான் இருப்பான். 

எந்த மனிதனும் ஏதாவது ஒரு வகையில் செயல்புரியாமல் இருக்க முடியாது. இந்த செயல்கள் செய்யும்போது மனிதன் முடிந்தவரை அடுத்தவருக்கு தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். ஏற்கனவே இருந்த கர்மாவை தொலைப்பதற்க்கு வழியையும் தேடினால் அந்த கர்மாவால் ஏற்பட்ட பாதிப்பை குறைத்துக்கொள்ளலாம்.

முடிந்தவரை உங்களின் உள்மனதில் இந்த தேடுதல் வேட்டை இருக்கவேண்டும். அப்படி தேடுதல் இருக்கும்போது இறைவனால் அந்த நபரை எளிதில் அடையாளம் கண்டு்க்கொண்டுக்கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வான். பூர்வபுண்ணியத்தை நீங்கள் சரிசெய்துவிட்டாலே போதும். உங்களுக்கு அனைத்தும் கிடைத்து விடும். இப்பொழுது அனைத்தும் கிடைத்துவிட்டது என்று உங்களுக்கு தோன்றினாலும் அது நிரந்தரம் அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும். 

நான் மாடர்ன் உலகத்தில் இருக்கிறேன் இது எல்லாம் எனக்கு தேவையில்லை என்று நினைத்தால் அப்படி நினைப்பது தான் உங்களின் முட்டாள் தனமாக இருக்கும். என்ன தான் மாடர்ன் உலகமாக இருந்தாலும் மரணம் என்பது அனைவருக்கும் வருவது மடடும் உண்மை தான். அது வருவதற்க்குள் அனைத்து கர்மாவையும் நீக்கிக்கொள்வது உங்கள் பிறப்பின் ரகசியம்.

தொடர்ந்து மற்ற கிரகங்களுக்கும் பார்க்கலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: