Followers

Thursday, February 14, 2013

சிம்மம் : ஐந்தில் செவ்வாய்



வணக்கம் நண்பர்களே !
                     சிம்ம ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. செவ்வாய்க்கு நட்பு வீடு.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார் மற்றும் குருவின் வீட்டில் அமருவதால் மதங்களில் உள்ளவர்களுக்கும் கெடுதல் செய்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார்.

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய்  பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குருவின் வீட்டில் செவ்வாய் அமர்வதால் அவரை ஏமாற்றி தாக்கியிருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய பகவான் அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய்  பகவான் அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய்  பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர் அவரை நீங்கள் வணங்கி அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். முருகனை வணங்கினால் முன்ஜென்மத்தின் நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

அஸ்வரூடாவாராஹி ஜோதிடவாஸ்து நீர் ஊற்று மையம் said...

suriyanukku natpanavar...simmathirkku yogakaran.. avar eppdi keduthal pannuvar.. thanusu avarukku natbu veedu...eppidi bass

rajeshsubbu said...

//* சுரேஷ் said...
suriyanukku natpanavar...simmathirkku yogakaran.. avar eppdi keduthal pannuvar.. thanusu avarukku natbu veedu...eppidi bass *//

வணக்கம் நண்பரே ஒரு மனித பிறப்பின் ரகசியமே கர்மாவை குறைக்கதான். ஒரு வீட்டில் அமரும் கிரகம் ஏதோ ஒரு வழியில் மட்டும் நல்லது செய்யும். சொந்த வீட்டில் அமர்ந்தாலும் கெடுதலை தரும். நாம் நினைத்துக்கொண்டுருப்போம் பணம் இருந்தால் அனைத்தும் கி்டைத்துவிட்டது போல் நினைப்போம். பூர்வபுண்ணியம் கெட்ட நபர்களுக்கு நல்ல பணவரவு வரும் அதே நேரத்தில் தாங்கமுடியாத துயரத்தை தருவான் நண்பரே. நான் எடுத்துக்கொண்டது என்ன தவறு நடந்திருக்கும் என்ற கோணத்தில் தருகிறேன். ஐந்தில் அமரும் கிரகநிலையில் நல்லதும் சொல்லிருக்கிறேன் பழைய பதிவுகளில் பாருங்கள் தெரியும். இது அனைத்தும் தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டவேண்டும் என்ற கோணத்தில் எழுதுகிறேன் நண்பரே.