Followers

Thursday, February 7, 2013

துலாம் : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் துலாம் லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். சனியின் வீட்டில் ராகு அமரும்போது சனியின் பண்பை கொடுத்துவிடுவார். தன் குழந்தைகளை கொன்றுக்க வேண்டும்.

அவிட்டம் 3 4 ம் பாதம் சதயம் பூரட்டாதி 1 2 3 ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது கும்பராசி.

அடையாளம் ?

கும்ப ராசி அவிட்டம் 3 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார்.பிறமதங்களில் பிறந்திருக்ககூடும். உயரமானவராக இருந்திருப்பார்.

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். பிராமண ஜாதியில் பிறந்திருக்ககூடும். உயரமானவராக இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

சனியின் வீட்டில் அமர்வதால் சனி செய்வதைபோல் கொலை செய்திருக்ககூடும். அல்லது விஷம் வைத்து கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால் 

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் அனைத்திற்க்கும் சொன்ன பரிகாரம் தான். அடையாளம் கண்டுபிடிப்பது எளிதான ஒன்று.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: