Followers

Friday, February 22, 2013

கன்னி : ஐந்தில் குரு


வணக்கம் நண்பர்களே !
                     கன்னி ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

கன்னி ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. சனியின் வீட்டில் குரு அமருகிறார் அதுவும் நீசமாக அமருகிறார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சனியின் வீட்டில் குரு அமருவதால் கோவிலில் வேலை செய்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சனியின் வீட்டில் குரு அமர்வதால் கடுமையான சித்திரவதை செய்திருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இருப்பீர்கள் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

குரு பகவானை வழிபட்டு வாருங்கள் சனிக்கிழமை அன்று அவர் உங்களை நாடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: