Followers

Monday, February 11, 2013

மிதுனம் : ஐந்தில் செவ்வாய்


வணக்கம் நண்பர்களே !
                     மிதுன ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

மிதுன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். துலாத்திற்க்கு செவ்வாய் சமம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார். குறிப்பாக தங்கச்சிக்கு கெடுதல் செய்திருப்பார்.  பெண்களுக்கும் கெடுதல் செய்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார்.

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.

அடையாளம்?

துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.உயரமானவாராக இருந்திருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு தெற்கு திசையில் அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். அந்நிய மொழி பேச தெரிந்திருக்ககூடும். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். கன்னடம், மலையாளம் மொழிகள் தெரிந்திருக்கும். நடுத்தர உயரம் இருந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

காம ரீதியாக தொந்தரவு கொடுத்திருப்பார். காதல் பிரச்சினையால் அவரை தாக்கியிருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் அமரந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் தென்மேற்கு திசையில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர் அவரை நீங்கள் வணங்கி அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். முருகனை வணங்கினால் முன்ஜென்மத்தின் நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

இதனை படித்துவிட்டு யாரும் பயம்கொள்ள தேவையில்லை. உங்களின் ஜென்மத்தை பற்றி அறி்ந்துக்கொள்ளுங்கள் அதனுடன் கர்மாவை தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

coumar said...

if there is no planet in fifth bhava, what will be the result?
r. jayakumar, pondy

rajeshsubbu said...

coumar said...
if there is no planet in fifth bhava, what will be the result?
r. jayakumar, pondy

வணக்கம் நண்பரே. கண்டிப்பாக எழுதுகிறேன். முதலில் இது எல்லாம் முடியட்டும். அப்புறம் அதனைப்பற்றி பார்க்கலாம்