Followers

Friday, February 8, 2013

கும்பம் : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் கும்ப லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கும்ப லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம். அதன் அதிபதி புதன்.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். புதனின் வீட்டில் ராகு அமருகிறார் மாமன் வழியில் யாரையும் கொன்றுருக்ககூடும்.

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதம் திருவாதிரை புனர்பூசம்  1, 2, 3 ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது மிதுன ராசி.

அடையாளம்?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் இருந்திருக்கலாம். குள்ளமானவராக இருந்திருப்பார்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருந்திருப்பார். பிறமதங்களை சேர்ந்தவராக இருப்பார். உயரமானவர்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். பிராமண ஜாதியில் பிறந்திருப்பார். மிதமான உயரத்தில் இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

புதன் ஒரு இரட்டை கிரகம். நரித்தனமாக வஞ்சகம் செய்து கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் பாதங்களில் தாக்கி உயிர்போயிருக்ககூடும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

சம்பந்தபட்டவரை தவிர வேறு ஒன்றும் இருக்கமுடியாது. அடையாளத்தை கண்டுக்கொள்ள செயல்படுங்கள் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: