Followers

Friday, February 8, 2013

தனுசு : ஐந்தில் ராகு


வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் தனுசு லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தனுசு லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய்.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் சகோதர்களை கொன்றுருக்கலாம்.

அசுவினி பரணி கிருத்திகை 1 ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது மேஷ ராசி.

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மதத்தில் பிறந்திருக்ககூடும்.உயரமானவராக இருந்திருப்பார்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். பிராமண ஜாதியில் பிறந்திருப்பார். நடுத்தர உயரமாக இருந்திருப்பார்

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார். நடுத்தர உயரமாக இருந்திருப்பார்

எப்படி கெடுத்திருப்பார்?

செவ்வாயின் வீட்டில் ராகு அமர்வதால் வெட்டுகாயம் ஏற்படுத்தி அல்லது தீயால் காயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

எப்படி தாக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை நன்றாக ஆழ்ந்து அனைத்தையும் எழுதமுடியும் ஆனால் நண்பர்கள் இதற்கே பயப்படுகிறார்கள் அந்த காரணத்தால் மேலோட்டமாக எழுதி வருகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பவர்கள் மேலும் இதனைப்பற்றி அறிய வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன பரிகாரம்?

சம்பந்தபட்டவரை உடனே தேடுவது நல்லது. பூர்வபுண்ணியத்திற்க்கு இதை தவிர வேறு ஒன்றும் இருக்கமுடியாது. வேறு யாராவது அதை செய் இதை செய் என்று சொன்னால் நம்பவேண்டாம். சம்பந்தப்பட்டவன் ரோட்டில் இருப்பான் நீங்கள் உங்களுடன் சம்பந்தப்படாத யாருக்கோ போய் எதையாவது செய்ய வேண்டாம். அது கடவுளாக இருந்தாலும் சரி. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: